அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு 11 மாவட்ட அமைச்சு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 08 பதவிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று பதவிகளும் கிடைக்கவுள்ளன. பதவிகளை பெற்றுகொள்ளும் மாவட்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள்,...

அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் வெளியாகியது!34 வது அமர்வு வரை காலக்கெடு!

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அலங்கை போர்க்குற்ற விசாரணையறிக்கையினை தொடர்ந்து  அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதே பிரகடனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்திப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திரம், இறைமை, பௌதீக ஒருமைப்பாடு, ஐக்கியதன்மை...
Ad Widget

மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்கள் அரைகுறையானதொரு முயற்சி மூலம் ஏமாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது- சிவில் அமைப்புக்கள் அறிக்கை

ஜெனிவா விசாரணை அறிக்கை தொடர்பிலான கூட்டு அறிக்கை ஒன்றை சிவில் அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை கூறுவதாவது. ஐ. நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பாக 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் வரவேற்கின்றோம். (ஐ.நா மனித உரிமை பேரவைக்கு விசாரணைக்க்கான தரவுகள் சேகரிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஆணைக்குட்பட காலப் பகுதியாகிய) பெப்ரவரி 2002க்கும்...

முழுமையான சர்வதேச விசாரணையே தேவை – தமிழர் செயற்பாட்டு குழு கோரிக்கை

ஐநா ஆணையாளரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையினை வெல்வது எப்படி என்பது குறித்து கரிசனை கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை உள்ளகப்பொறிமுறையினை நிராகரித்த ஆணையாளரின் காரணங்களினை வரவேற்றுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு(TACIAM)  முழுமையான சர்வதேச விசாரணையே தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு...

ஐ.நாவின் அறிக்கையை வரவேற்கிறோம்! கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும்- கஜேந்திரகுமார்‬-

 இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட  அறிக்கை  போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மேலும் அறிக்கையினை வரவேற்பதோடு கலப்பு நீதிமன்றம் தொடர்பில் முழுமையான தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய முன்னணியின் சார்பாக...

யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது

யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழைய மாணவர் சங்கம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.  இது தொடர்பில் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இணைப்பு   தொடர்பான செய்தி யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும்...

வடக்கு முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானம் பிசுபிசுப்பு!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொண்டுவந்த பிரேரணை கடும் எதிர்ப்பு காரணமாக பிசுபிசுத்துப்போனது. சட்டத்தரணி கே. வி. தவராசாவின் இல்லத்தில் காலை...

மன்னார் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் வடமாகாணசபை அமைச்சரும் இணைந்தார்!.

கையெழுத்துபோராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் இணைந்தது

ஜெனீவா அமர்வுக்கு கூட்டமைப்பு உத்தியோக பூர்வ பிரதிநிதிகளை அனுப்ப முடிவில்லை – சுமந்திரன்

எதிர்வரும் 14ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சையின்  அமர்வுக்கு கூட்டமைப்பு உத்தியோக பூர்வ பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து இன்னும் முடிவில்லை  என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார். இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் சில உறுப்பினர்கள் செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனந்தி...

சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்வு

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்ந்துள்ளது. 4 வது நாளான இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திருகோணமலையில் இன்று மாலை 3 மணியளவில் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் இதேவேளை யாழ்பாணத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது...

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை இராதாகிருஷ்ணன் நல்லைக்கந்தன் திருவடியில் இன்று காலமானார்.

இன்று (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும்...

காணாமல்போனோர் பற்றிய கடந்தகால விசாரணைகள் தொடர்பில் ஐநாவுக்கு அறிக்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் சிஎச்ஆர்டி எனப்படும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐநாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்திருக்கின்றது என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறல் விடயத்தில் ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள...

திருகோணமலையில் 07ம் திகதி திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...

சர்வதேச விசாரணை முடிவடைந்தமை நீதியரசருக்கு புரியாதிருந்தால் அது ஆச்சரியம் ! – மாவை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...

மக்கள் ஆர்வமாக வரலாற்றுக்கடமையில்! கையெழுத்து போராட்டத்தில்…

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்கிறது கையெழுத்து வேட்டை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...

அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணைக்கு எதிர்கட்சி நடுநிலை!

19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக 30 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதாயின் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்நிலையில் இதுதொடர்பில் 3ம்திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மீதான வாக்களிப்பில்  தமிழ் அரசு கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். முன்னதாக இது பற்றி எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது ”அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு...

பதில் எதிர்க்கட்சி தலைவராக மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின்  அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார்.  இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...

கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது ! – சுரேஸ் பிறேமச்சந்திரன்!!

நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையென தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளினில் ஈடுபடவேண்டாமென தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையிடம் சுரேஸ்பிறேமச்சந்திரன் கோரியுள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையெனவும் இனி சர்வதேச விசாரணை பற்றி கதைக்க வேண்டியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டு மக்களினை குழப்பும் நடவடிக்கையாகும். அதே கருத்தினை தான் கட்சி தலைவரான சம்பந்தனும்...
Loading posts...

All posts loaded

No more posts