வடக்கு கிழக்கை ‘பௌத்த நாடு’ என விழிப்தை கண்டிக்கின்றேன்! : வடமாகாண முதலமைச்சர் சி.வி.

பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மாகாணங்களிலும் பௌத்தர்கள் அதிகமாக வாழ்வதால் அவற்றில் பௌத்தத்திற்கு முன்னுரிமைகொடுக்கலாம். ஆனாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களோ சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும...

ஈழத் தமிழர்களே நன்றி! அரசியல் கைதிகள் உருக்கம்

அனுராதபுரச் சிறையில் உண்ணவிரதம் இருக்கும் கைதிகள், ஈழத் தமிழர்கள் தமக்காக முன்னெடுத்த கடையடைப்பு உள்ளிட்ட ஆதரவுப் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தல் கடும் உடல் நலப் பாதிப்பிற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். தமக்கான தீர்வு இனியும் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையிலான கடும் உண்ணாவிரதப் போருக்கு அவர்கள் தயாராகி உள்ளனர். தற்போதைய உண்ணாவிரதப் போரில் தரப்படும்...
Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை! : ஜனாதிபதி உறுதி

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார். யாழ். இந்துக்கல்லூரியின் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை...

நீங்கள் உயர்த்தவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல, சமாதானத்திற்கான வெள்ளைக் கொடிகளையே!: ஜனாதிபதி

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற...

ஜனாதிபதியின் நிகழ்வு: மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

யாழில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ள விடாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அகில இலங்கை தமிழ் மொழித் தினம் (இன்றையதினம்) யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு இருந்தார். குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ்.இந்துக்கல்லூரியின் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டு இருந்தன. எனினும் இன்றைய...

மாலை நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் வாய்ப்பு!

தற்போது நிலவி வரும் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை நேரங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை விழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் காலநிலை அவதானியுமான கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார். மின்னல், மழை, டொனாடோவை ஏற்படுத்தும் மழை மேகங்களில் மேற்பரப்பில் சுமார் 8 கிலோ மீற்றர் வரை 95 வீதம் பனி படிந்திருப்பதாகவும்...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது அமைப்புக்களுடன் ஜனாதிபதி விரைவில் சந்திப்பு!!

யாழ்.இந்துக்கல்லுாரிக்கு முன்பாக அரசியல் கைதிகள் தொடர்பில் வீதியில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை ஜனாதிபதி நேரடியாக சந்தித்தார். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது அமைப்புக்களுடன் ஜனாதிபதி சந்தித்து விரைவில் கலந்துரையாடுவதாக உறுதியளிப்பு.

83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில்...

எதிர்ப்புக்கு மத்தியில் யாழில் கால்பதித்தார் ஜனாதிபதி!

தேசிய தமிழ் தின விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தற்போது விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான புத்தூர், நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை, தேசிய தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா...

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதாக ஆளுநர் உறுதியளிப்பு!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன்...

ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை

யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில் கல்வி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும் வைபவம் உட்­பட பல்­வேறு நிகழ்­வு­களில் பிர­தம அதி­தியாக கலந்­து­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்­றை­ய­தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வரவுள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன்...

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம்...

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சோர்வடைந்துள்ளனர்!

"உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேற்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள்...

யாழில் போராட்டம் நடத்த தடை!

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது, நகரப்பகுதி மற்றும் நிகழ்வு இடம்பெறும் இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ்.பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர். தேசிய தமிழ் தின நிகழ்வு யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்....

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது! முதலமைச்சர் சி.வியிடம் கூறிய ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும், ஹர்தாலும் இடம்பெற்றுள்ள நிலையில் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வைத்து...

50 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பம்!

வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் எனவும், இந்த வீடமைப்பு திட்டத்திற்காக...

அரசியல் கைதிகள் அல்ல அவர்கள் முன்னாள் போராளிகள்! அவர்களை விடுதலை செய்ய முடியாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விகளுக்கு...

ஐ.நா சபையின் விசேட அதிகாரிக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பெப்பலோ டி கிறீப் குழுவினருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் நடடிவக்கைகள் தொடர்பிலும்...

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டில் மேக மூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை...

வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு : சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது!!

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 18,650,939,000 ரூபாவும், மூலதனச் செலவுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts