Ad Widget

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதாக ஆளுநர் உறுதியளிப்பு!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினர்.

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பேசுவதாக ஆளுநர் உறுதியளித்தார் என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts