தேசிய தமிழ் தின விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
தற்போது விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான புத்தூர், நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, தேசிய தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா இன்று யாழ். இந்துக் கல்லூரியல் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது, இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.