பல்கலை ஊழியர் சங்கச் செயலாளரை காலால் உதைந்ததா பொலிஸ்?

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஏ9 வீதியை மறித்து போராட முற்பட்ட யாழ் பல்கலைக்கழக ஊழிய சங்க இணைச் செயலாளரை பொலிஸார் ஒருவர் காலால் தட்டிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் அவர்களது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார். இதன் பிரகாரம்...
Ad Widget

சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதம்!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 12 ஒக்ரோபர், 2017 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம் கொழும்பு...

ஜனாதிபதி, சம்பந்தன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடகஅறிக்கை 12-10-2017 வவுனியாமேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்தவழக்குகள் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும்,கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர்கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான...

சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்! : இரு இளைஞர்கள் படுகாயம்!!

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்....

அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படும்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

“வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதம் சார்பற்ற நாடு என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஆனால், நாட்டில் அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை.இதனை கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் வழிநடத்தல் குழுவிலும் இல்லை. அதனை கொண்டு வருவதற்கான சாத்தியம் அரசாங்கத்துக்குள்ளும், நாட்டுக்குள்ளும் கிடையாது.அந்த உண்மையை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதில்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம்சேர்க்க அனந்தி சசிதரன் அழைப்பு

வட. மாகாணத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வட.மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றக் கோரியும், வழக்குகளை துரிதமாக விசாரித்து...

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

ரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று மாலை ரயில்வே சாரதிகள், அரசாங்க அதிகாரிகளுடன்...

யாழ்ப்பாணத்தில் புதிய மலேரியா நுளம்புகள்!

தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பேருந்து நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது...

ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வழக்கு...

தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்க உதயமாகியது வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையில், வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பொன்று வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலை அடுத்து, குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது....

வடக்கு மக்கள் நல்லொழுக்கம் மிக்கவர்கள்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு...

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றுடன் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியாருக்கு சொந்தமான குறித்த பேரூந்து ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில்...

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ! மக்கள் சிரமம்!!

யாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறான...

தமிழ் தேசிய கூட்டமைப்பு யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றயதினம் (11) பிற்பகல் 3.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன்...

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!

இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சி! : தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவர் கைது!

காதலரை மந்திரத்தால் வீழ்த்தும் முயற்சிக்காக நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தமிழ் பெண் மந்திரவாதி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடொன்றில் 670,000 ரூபா பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அதனுடன் தொடர்புடைய தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பொலிசாரால் பரிசு!

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 35 மாணவர்களுக்கு இன்று பொலிசாரால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் காட்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள், சீருடைகள் என்பவை...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து, இன்று (புதன்கிழமை) காலை இந்த வழிபாட்டை நடத்தியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற...
Loading posts...

All posts loaded

No more posts