Ad Widget

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் அவர்களது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதியின் செயலாளருடனும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளார். இதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் சடலம் இன்றைய தினம் (14) கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற இவர், ஆஸ்திரேலிய அரசினால் மனுஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் 09 ஆயிரம் டொலரைச் செலுத்துமாறு கோரியிருந்ததாக மேற்படி இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் மேற்படி விடயம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, மேற்படி இளைஞனின் சடலத்தை அன்னாரது குடும்பத்திற்கு எவ்வித செலவுகளுமின்றி, உடனடியாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

Related Posts