நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை : மஹிந்த

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி...
Ad Widget

தலைமைகள் நீக்கப்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார் கஜேந்திரகுமார்

தமிழினம் நடுத்தெருவில் நிற்கக் காரணமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

தென்னிலங்கையில் எழுந்துள்ள சவாலை எதிர்நோக்க வேண்டிய தருணம் இது : எம்.ஏ.சுமந்திரன்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தினால், சமஷ்டி தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கையுடன் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்....

எனக்கும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது -அங்கஜன் இராமநாதன்

என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த அறிக்கையில், “எனது அரசியல் பயணத்திலே பல ஆண்டுகளாக பலம் சேர்த்த மக்களுடைய துன்பங்களே எப்போதும்...

யாழ். மாநகர சபை மேயராக மணிவண்ணன்!- சந்தர்ப்பத்தை வழங்குவாரா டக்ளஸ்?

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆட்சிக்கு ஈ.பி.டி.பி. யினர் வெளியிலிருந்து ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையை ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ள 10 ஆசனங்களே ஆட்சியை தீர்மானிப்பவையாக அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்திறன்...

த.தே.கூ- ஜ.தே.க கட்சிக்கும் இடையில் முறுகல்!!!

காரைநகர் பகுதியில் வாக்களிக்கச் சென்ற மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சிக்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. காரை நகர் பகுதியில் இன்று வாக்களிக்கச் சென்ற மக்களிடம் ஜக்கிய தேசிய கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரத்தை செய்ததுடன், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த...

ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல்!!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேளையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிருஸ்ணபகவான் தனது இல்லத்தில் இருந்த சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

இறுதி நேரம் வரை காத்திருக்காது உடனே சென்று வாக்களியுங்கள்!!!

"உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு இன்று(10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும். இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல்...

யாழில் இதுவரை 22 வீத வாக்குகள் பதிவு!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை 22.05 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளில் நடைபெற்று வரும் இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக தமது வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர். அந்தவகையில் வலி.மேற்குப்பிரதேச சபையில் மக்கள் தமது வாக்ககுளை...

கூட்டமைப்பு வேட்பாளர் மானிப்பாயில் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டறிக்கைகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்இருவரையும் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார்...

தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம்

முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை...

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன்(வயது 20) என தெரியவருகின்றது. குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3...

“அனைத்தும் முடிந்துவிட்டது” என்பதையே நான் சைகையால் காண்பித்தேன்: பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ

லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொண்டையை அறுக்கும் சைகையைக் காண்பித்து ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ தாம் அவ்வாறு சைகை காண்பித்தமை அனைத்தும் முடிவடைந்துவிட்டது எனக் கூறுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார். ‘நான் என்னுடைய சைகையினால் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்பதையே அவர்களுக்கு காண்பித்தேன். நான் இலங்கையின் இலட்சினையை காண்பித்தபோது இதுவே உங்கள்...

யாழில் ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வாக்களித்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்படி யாழ்மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை ஏழு மணியில் இருந்து வயோதிபர்கள், இளைஞர்கள் யுவதிகள், என பல்வேறு தரப்பினர் தமது வாக்குகளை பதிவுசெய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, வாக்குச் சாவடியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!!

குடிபோதையில் வாக்களிக்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவன் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள், அனைத்து...

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டைகள்

புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு ,அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை,...

உள்ளுராட்சிமன்ற தேர்தல் : முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்கா அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள்...

வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன. யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக விளங்கும் யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பகிர்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts