Ad Widget

“அனைத்தும் முடிந்துவிட்டது” என்பதையே நான் சைகையால் காண்பித்தேன்: பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ

லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொண்டையை அறுக்கும் சைகையைக் காண்பித்து ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ தாம் அவ்வாறு சைகை காண்பித்தமை அனைத்தும் முடிவடைந்துவிட்டது எனக் கூறுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

‘நான் என்னுடைய சைகையினால் அனைத்தும் முடிவடைந்துவிட்டது என்பதையே அவர்களுக்கு காண்பித்தேன். நான் இலங்கையின் இலட்சினையை காண்பித்தபோது இதுவே உங்கள் நாடு மாறாக தமிழீழம் அல்ல’ என்பதை வெளிப்படுத்தினேன் என ரிவிர சிங்கள நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் பிரிகேடியர் பிரியங்க தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக திகழும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் நடவடிக்கையானது தமிழர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமைகள் அமைப்புக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியதுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆயுதப்ப்போரின் இறுதிநாட்களில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் பாரிய அட்டூழியத்தை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளன எனக்கூறியிருந்தன.

பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts