Ad Widget

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!!

குடிபோதையில் வாக்களிக்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவன் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள், அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும், தலா 2 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts