Ad Widget

கூட்டமைப்பு வேட்பாளர் மானிப்பாயில் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டறிக்கைகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்இருவரையும் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts