Ad Widget

வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.

யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக விளங்கும் யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பகிர்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 148 நிலையங்களுக்கும் மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக 901 பெண் பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 3,89,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 457 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக மாவட்டத்திற்குள்ளிருந்தும் வெளியில் இருந்து வருகைதந்துள்ள 4 ஆயிரத்து 437 உத்தியோகத்தர்கள் இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களில் 124 வட்டாரங்கள் கொத்தணி அடிப்படையிலும் 20 வாக்கு நிலைங்களில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts