- Tuesday
- May 12th, 2026
சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த...
அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, விஜயகலாவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் அதிகரித்துள்ள...
“நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தார். பிரதி அமைச்சர்...
மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது. உயிரிழந்தவர் திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த என்.நஷீர் (வயது-25) என்பவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதசாரிகள் கடவையை கடக்க சென்ற மாணவியொருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட மாணவி மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வாகனமொன்று மோதியதில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது. பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த, உமையாள்புரம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் தரம்...
உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்பட்ட மக்கள் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் இருப்பு அங்கு தொடர்வதால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் வடக்கில் நேற்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின்...
யாழ். சுழிபுரம் மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் மன்னார் முருங்கனில் அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அமைதி பேரணி இடம்பெற்றது. முருங்கன் வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட அமைதி பேரணி,...
இலங்கை கல்வித்துறையில் தகுதியற்ற ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்....
அக்கராயன் பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி வட.மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்கவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரியே பிரதேச மக்களால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அக்கராயன் பிரதேசத்தில் இருந்து சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட...
தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகளைப் பார்க்கும்போது மீண்டும் நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
வன்முறைகளினால் எவற்றினையும் சாதிக்க முடியாது. வடக்கில் வன்முறைகள் முற்றாக புறக்கணிக்கப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழில் கடந்த சில காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,...
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இனியும் இவர்களை நம்பிப் பிரயேசனமில்லை என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) யாழ். அரசாங்க அதிபர் தலைமையில்...
முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர் கைது...
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் கூரிய வாளுடன் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யூனியன் கல்லூரி வீதியூடாக பயணித்தபோது, அக்கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை துரத்திச் சென்று சுற்றிவளைத்த...
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொலிஸார் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும். பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாண அவைத்...
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்ற போதிலும் தற்பொழுது நிலவும் வட்டி வீதங்கள் காரணமாக கடனை பெற்று வர்த்தக...
சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த ஆடைகள் சிறுமி றெஜினாவினுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 2 பேரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரின் வீடு ஒன்றிற்குள் புகைந்து குறித்த இருவரும் தாக்குதல்...
வடக்கு இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இட்டுச்சென்று அவர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டில் குறிப்பிட்ட சிலர் ஈடுபட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
தனியார் பெற்றோல் பௌசர் உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்துக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சங்கத்தின் செயலாளர் சாந்த...
Loading posts...
All posts loaded
No more posts
