நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால் நாங்கள் என்னண்டு வியாபாரம் பார்ப்பது! – யாழ் வர்த்தகர்கள்

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நேற்று வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ் நகரம் உள்ளிட்ட பிரதேச வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துளைப்பு வழங்க மறுத்த நிலையில் நேற்றயதினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை. சில இடங்களில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு காலையில் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் “நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால்...

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்படி திருவிழாவின்...
Ad Widget

மல்லாக இளைஞர் கொலை வழக்கு : பொலிஸாருக்கு நீதிவான் எச்சரிக்கை!!

மல்­லா­கத்­தில் இளை­ஞர் ஒரு­வ­ரைச் சுட்­டுக்­கொன்ற பொலிஸ் நப­ரைத் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் கைது செய்­யாது தவிர்ப்­பது தொடர்­பா­கச் சுட்­டிக்­காட்டி விசா­ர­ணை­யில் திருப்­தி­யில்லை என்று எதி­ராளி தரப்பு வழக்­கு­ரை­ஞர்­கள் தெரிவித்­ததை அடுத்து உரி­ய­மு­றை­யில் விசா­ரிக்­கத் தவ­றி­னால் வேறு பொலிஸ் நிலை­யம் ஊடாக வழக்கை விசா­ரிப்­பது குறித்­துப் பரி­சீ­லிக்­க ­வேண்­டி­யி­ருக்­கும் என்று எச்­ச­ரித்­தார் மல்­லா­கம் மாவட்ட நீதி­வான் ஏ.அலெக்ஸ்­ராஜா. மல்­லா­கத்­தில்...

சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் சிக்கினர்!

மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக...

வட.கிழக்கில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்: உலக வங்கி!

மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரச...

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு!

சமையல் எரிவாயு விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் : சி.தவராசா

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தவராசா...

இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டும் எதிர்பார்க்கக்கூடாது: அனந்தி

வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என வட.மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது...

வங்கி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பு?

அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் வரும் ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க அறிவித்துள்ளார். அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு...

சுழிபுரம் மாணவி கொலை : ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

சுழிபுரம் மாணவி படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்....

வடக்கு உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன் நீடிப்பார்!

“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” இவ்வாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான...

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் பேரணி!!

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை சங்கானை பிரதேச செயலகம் நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். சழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சழிபுரத்திலிருந்து சங்கானை...

மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்!

யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட...

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் மீது கொலைவெறி தாக்குதல்!! தடுக்க சென்ற சகோதரியின் கையும் துண்டிப்பு!!

மானிப்பாயில் நேற்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் மற்றொரு தாக்குதலில் இளைஞர் மற்றும் அவரது சகோதரி என இருவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் லோட்டன் வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவுடன், வீட்டின் குடும்பத்தலைவருக்கு...

சிறுமிகள் துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். “ஆசிரியர், கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளந்தவர். கௌளரவமாக மணம் முடித்து, பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் குடும்பத்தை பார்க்குமளவுக்கு உழைக்கிறார்....

மாண்புமிக்க இனமொன்றை இராணுவ இயந்திரத்தின் துணையோடு இலங்கையின் பேரினவாத அரசு மௌனமாகக் கொலைசெய்கின்றது

“நேற்று ஒரு தங்கைக்காக ,இன்று ஒரு சிறுமிக்காக, நாளை இன்னுமோர் உறவுக்காக எனப் பெயரளவில் கூடிநின்று ஆர்ப்பரித்துவிட்டு ஓய்ந்துவிடப்போகிறோமா? இன்று போதைப்பொருள் பாவனையும், பாலியல் குற்றங்களும், கொலை கொள்ளைகள், குழு மோதல்கள், சாதியின் பெயரால் கலவரங்கள் என்பன அதிகரித்த ஒரு வஞ்சிக்கப்பட்ட பூமியாகிவிட்டது எம் தாய்மண்” இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தத்...

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில்...

சுழிபுரத்தில் தொடரும் பதற்றம் – நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சுழிபுரம் சந்தியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்....

மானிப்பாயில் வயோதிப் பெண் திட்டமிட்ட கொலை?

மானிப்பாயில் வயோதிபப் பெண் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்தே அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்ணே கொலை...

சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை யாழ்ப்பாண மாவடத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடையைப்பை நடத்த...
Loading posts...

All posts loaded

No more posts