Ad Widget

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார்.

மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார்.

மிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

Related Posts