Ad Widget

சுழிபுரம் மாணவி கொலை : ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

சுழிபுரம் மாணவி படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்திருந்தனர். இதன் பின்னர் அங்கிருந்து பஸ்களில் யாழ்.சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆளிநர் ரெஜினோல்ட் கூரேயிடம் மகஜரொன்றையும் கையளித்தனர். அதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்திருக்கின்றனர்.

Related Posts