Ad Widget

சிறுமி ரெஜினா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

சுழிபுரம் ஆறு வயது சிறுமி ரெஜினா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை...

சுழிபுரம் ரெஜினா கொலை – மூடிய அறையில் சாட்சிப் பதிவு

சுழிபுரரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில்...
Ad Widget

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கு – சிறுமியின் நண்பியிடம் சாட்சியப்பதிவு!

யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள காட்டுப்புலம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக உறவினர்களிடம் வெளிப்படுத்திய சிறுமி மற்றும் சிறுவன் ஒருவனிடமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதிவானின் சமாதான அறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வழக்கின் முக்கியமான சாட்சிகள் இருவரை எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிமன்றால்...

றெஜினா கொலை வழக்­கில் சாட்­சி­யங்­கள் பதிவு!!

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லத்­தில் படு­கொலை செய்­யப்­பட்ட சிறுமி றெஜி­னா­வின் வழக்குநேற்று மல்­லா­கம் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சிறு­மி­யின் உற­வி­ன­ரான பெண் ஒரு­வ­ரும், றெஜி­னா­வு­டன் சம்­பவ தினத்­தன்று பாட­சா­லை­யில் இருந்து சேர்ந்து வந்த நண்­பி­யி­ட­மும் சாட்­சி­யங்­கள் பெறப்­பட்­டன. வழக்கு விசா­ர­ணை­கள் எதிர்­வ­ரும் 21ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு...

ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி சிவனேஷ்வரன் ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் பிரதான...

சுழிபுரம் சிறுமி கொலையாளிகள் சுதந்திரமாக திரிவதாக குற்றச்சாட்டு!

சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது....

யாழ். சிறுமியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதி பேரணி!

யாழ். சுழிபுரம் மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் மன்னார் முருங்கனில் அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அமைதி பேரணி இடம்பெற்றது. முருங்கன் வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட அமைதி பேரணி,...

படுகொலை செய்யப்பட்ட றெஜினாவின் ஆடைகள் கண்டெடுப்பு!!

சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த ஆடைகள் சிறுமி றெஜினாவினுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால் நாங்கள் என்னண்டு வியாபாரம் பார்ப்பது! – யாழ் வர்த்தகர்கள்

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நேற்று வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் யாழ் நகரம் உள்ளிட்ட பிரதேச வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு ஒத்துளைப்பு வழங்க மறுத்த நிலையில் நேற்றயதினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில்லை. சில இடங்களில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு காலையில் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் “நீங்கள் மாதத்திற்கு ஒரு ஹர்த்தால் செய்தால்...

சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் சிக்கினர்!

மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலையிடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சடலமாக...

சுழிபுரம் மாணவி கொலை : ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

சுழிபுரம் மாணவி படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்....

ஆரம்ப பிரிவு மாணவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவரே அழைத்துச் செல்ல முடியும் – வடமாகாண கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்ட வர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும்” இவ்வாறு வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார். மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில்...

சுழிபுரத்தில் தொடரும் பதற்றம் – நாளை கடையடைப்பு!!

சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்வி அமைச்சு ஊடாக மாணவிகளின் பாதுகாப்புக்கு உரிய தீர்வு பெற்றுத் தரக் கோரி மாணவர்களும் சுழிபுரம் மக்களும் இன்று காலையிலிருந்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சுழிபுரம் சந்தியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்....

சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி நாளை கடையடைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை யாழ்ப்பாண மாவடத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடையைப்பை நடத்த...

காவல் துறையா? கஞ்சாத் துறையா?? – யாழ் பல்கலை மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில்!!

சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்கலைக்கழக முன்றலில் ஆரமம்பித்த இப் போராட்டம் பலாலி வீதிவரை சென்று இரு மருங்கிலும் ஆபர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறை கயவர்களுடனா, காவல் துறையா கஞ்சா துறையா, இன்னும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் இப்படி ஆவது? உள்ளிட்ட வாசகங்கள்...

பிஸ்கட், ஜெலியை உண்ணகொடுத்து மாணவியை மூன்றுபேர் அழைத்து சென்றனர் : மாணவனின் திடுக்கிடும் சாட்சி!

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஏழு வயது சிறுவனொருவன் வாக்குமூலம் வழங்கியுள்ளான். இதனடிப்படையில் பொலிஸார் உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேரில் பார்த்த சாட்சிகள் கிடைக்காத நிலையில் நேற்று (புதன்கிழமை) அப்பகுதியைச் சேர்ந்த மாணவனொருவன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளான். சிறுமிக்கு பிஸ்கட்...

றெஜினாவுக்கு நீதிகேட்டு சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6...

கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டு சிறுமி கொலை – சட்ட மருத்துவ அதிகாரி

“சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார். சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளது” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற...

சுழிபுரம் சிறுமி படுகொலை: நீதிகோரி மாணவர்கள் வீதியில்!

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

சிறுமியைக் கொலை செய்ததாக ஒருவர் ஒப்புதல்!!! மனநோயாளி போல் நடிக்கும் சந்தேகநபர்!!

“சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் மாறுபட்ட தகவல்களை வழங்கி அவர் மன நோயாளி போல் நடிக்கிறார்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 6 பேர் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts