மல்லாகம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது துப்பாக்கியே தவறுதலாக வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை பொலிஸ் நிலைய அதிகாரியே உயிரிழந்துள்ளார். அவர் கடமையிலிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவருகின்றது.
உயிரிழந்தவர் திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்த என்.நஷீர் (வயது-25) என்பவரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.