யாழில்.துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது!

யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அராலி பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றிடம் துப்பாக்கி மற்றும் வாள்கள் உள்ளன என வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் குழு வசிக்கும் பகுதியில் நேற்றைய...

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக புதிய இணைய வலைத்தளம் அறிமுகம்

9 ஆவது நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, அவர்களின் தனிப்பட்ட விபரங்களை நாடாளுமன்ற செயலகத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற செயலகம் ‘இணைய பதிவு முறை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தகவல்களை வழங்க, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு பின்னர் இணைய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்பிக...
Ad Widget

சுடலையில் மறைந்திருந்த கொள்ளையன் உள்ளிட்ட மூவர் கைது!

பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் சுடலை ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பலாலி பொலிஸார் தெரிவித்தனர். பலாலி பொலிஸ் பிரிவில் அண்மையில் வீதியால் சென்ற பெண்ணிடம்...

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பம்!!

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுளள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 270 பேர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். இவ்வாறு தேர்வானவர்களில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம்...

தமிழ்த்தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு ஆளாகவுள்ளது – பொ.ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தொடர்ந்தும் தமிழ்த் தேசியப் பயணத்தில் தடம்மாறாது பயணிக்கும் என, அவ் இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணம் கிளிநொச்சித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த நிலையில், இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியப்...

தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய வர்த்தமானி – கலையரசன் பெயரும் உள்ளடக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காமினி லக்ஸ்மன் பீரிஸ், சாகர காரியவசம், அஜிட் நிவிட்கப்ரல்,...

அம்பாறையில் வாள்வெட்டு தாக்குதல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து...

பிரதமராக பதவியேற்ற பின்னர் சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார் மஹிந்த ராஜபக்ச

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.08.09) பிற்பகல் நாராஹேன்பிட அபயராம, பெல்லன்வில்ல ரஜ மஹா விகாரை மற்றும் பெபிலியான சுனேத்ராதேவி மஹா பிரிவேனா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார். நாராஹேன்பிட அபயராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மேல் மாகாணத்தின் தலைமை...

வெள்ளை வாகனத்தில் வந்தோரால் இளம் பெண் கடத்தல்!!

யாழ்.நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான இளம் பெண்ணை கடத்தி சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு...

கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு சுமந்திரனே காரணம்; அவரை நீக்கினால் கட்சிகள் ஒன்றுபடும்!!

தமிழ் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்கும்...

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களின் அறிவுறுத்தல்!!

இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில்... பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கு சிறு தயக்கம் கொரோனா அச்சம் காரணமாக. தற்போது எமது பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்கள் காணப்படவில்லை. ஆகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லலாம். இருப்பினும் பாடசாலையில்...

15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை!!

அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கோவிட் – 19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். க.பொ.த. சாதாரண தரத்தில் விஞ்ஞானம், கணிதம்...

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தன்னிச்சையானது- சித்தார்த்தன் கடும் எதிர்ப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நுற்று (ஞாயிற்றுக்கிழமை)...

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன....

பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் கட்டம் கட்டமாக திறப்பு

பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் இன்று முதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இதேநேரம் 200க்கும் அதிக எண்ணிக்கையில்...

கூட்டமைப்பில் சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவாகியுள்ளனர் – விக்னேஸ்வரன்

“விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு அழிக்கப்படக்கூடாது என்றும் தவறானவர்களை நீக்கி சரியானவர்களை தெரிவு செய்து கூட்டமைப்பு சரிசெய்யப்படவேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பரிப்புரைகள் இன்று சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நிலைமையினை உருவாக்கி இருக்கின்றது” இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ள அதன் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகள் தொடர்பில் பொதுக் குழுவே தீர்மானிக்கும்!!!

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக்...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு!!

நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு தேசிய பட்டியலின் மூலமும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இந்நிலையில், தேசியப் பட்டியலில் தெரிவாகும் உறுப்பினர் தொடர்பாக பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்...

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்!!

இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார். சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக...
Loading posts...

All posts loaded

No more posts