Ad Widget

வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமானது மாங்குளம் வைத்தியசாலை!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஸ்ணபுரம் பகுதியில் 100 படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றது.

Related Posts