Ad Widget

வடக்கில் பெண்கள் தலைமையில் குடும்ப நலன்களைக் கவனிக்க புதிய அலுவலகம்!

வட மாகாணத்தில் உள்ள பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நலன்களைக் கவனிப்பதற்கென தலைமையகம் ஒன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக ​நேற்று (27) விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில்...

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை...
Ad Widget

வடமாகாண மக்களுடைய அவசிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் பிரதமரிடம் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் கையளிப்பு!

உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான வடக்கு மாகாண மக்களுடைய தேவைகளும் கோரிக்கைகளை இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார். இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் நிலவும் அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில்...

சென்.ஜோன் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாண சென்.ஜோன் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது கல்வி இராஜாங்க அமைச்சு இவ் அனுமதியை வழங்கியுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கான கட்டடத்தை பாடசாலை நிர்வாகம் தனது சொந்த பணத்தில் அமைக்கவுள்ளதுடன் அதற்கான பொருட்களையும் தனது சொந்த நிதியிலே பெறவுள்ளது. இந்த திட்டத்துக்காக 60 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக...

பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம்

கோடாரியினால் தாக்கப்பட்ட படுகாயமடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இதேவேளை, அவர் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 34 வயதான லக்மால், பக்கமுன பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்தார்....

60 கிலோகிராம் கஞ்சா மீட்பு

இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோகிராம் கஞ்சா பொதிகளை வியாழக்கிழமை (26) மாலை மீட்டதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டீ சில்வா, வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். கடற்கரைக்கு அருகிலுள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி பொதி மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதி...

இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது!

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கத் தமிழர்கள் மூவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்லாவரம் அருகில் உள்ள பொழிச்சலூர் என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் பதுங்கியிருந்த சமயம் கைதுசய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான துஸ்யந்தன், 30 வயதான லிங்கேஸ்வரன் மற்றும்...

சிம்புவை இயக்கும் கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு. சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'. அனிருத் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி அடுத்து என்ன படம் இயக்கவிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது....

தேசிய விருது பெற்ற குழந்தைகளுக்கு தங்க சங்கிலி!

62-வது தேசிய விருதுக்கான படங்கள் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காக்கா முட்டை’ படத்திற்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது பெற்றது. மேலும் இதில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றது. எம்.மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும், வெற்றிமாறனின் க்ராஸ்...

இந்தியாவை மற்ற அணிகள் தொடர்ந்து தோற்கடிக்க வேண்டுமாம்!

உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக ஊடகங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் வேளையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில்...

தற்கொலையை தடுக்க புதிய வழி

அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும்...

சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கூறி மக்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கதைத்து மக்களை ஏமாற்றுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக சாடியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,...

பிரதமர் தலைமையில் பொதுமக்கள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சந்திப்பு

பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குறித்த சந்திப்பில் மக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டு வருகின்றது. மேலும் இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட...

முதலமைச்சர் சி.வி வராதது கவலையளிக்கிறது – விஜயகலா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வருகை தராமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...

நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக நாகவிகாரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வழிபாடுகளில் ஈடுபட்டார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். நாகவிகாரையில் நடைபெற்ற வழிபாடுகளில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

அரசியலுக்குள் பலியாகமாட்டேன் – சிறிதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம்...

மகனைக் கற்க வைப்பதற்காக பரிதாபமாக உயிர் விட்ட தாய்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார். சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை. சிவசோதி தனது உடலில்...

சிறுநீரக நோய்க்கெதிராக முற்கூட்டியே செயற்படுங்கள் – மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் ஆயிரம் பேர் வரையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி சுமார் 600 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 120 பேர் வரையில் ரத்த சுத்திகரிப்புச் செய்யப்படுகின்றனர். வாரத்தில் 2 தடவைகள் ஒவ்வொரு வருக்கும் ரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். தவறின் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிவிடும் இவ்வாறு யாழ்.போதனா...

பிரதமர் வருகையை புறகணிக்கிறது வடமாகாணசபை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று கலந்து கொள்ளும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையினர் பங்கேற்க மாட்டார்கள் என்று நம்பகரமாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதையடுத்து வடக்கு மாகாணசபையினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு இன்று...

யாழில் பிரதமர் தலைமையில் கர்ப்பிணிதாய்மாருக்கு போசாக்கு திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறைநிறை பிள்ளை பிறப்பை இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெறுமதியான போசாக்கு பொதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்...
Loading posts...

All posts loaded

No more posts