Ad Widget

எழுதுமட்டுவாளில் இனந்தெரியாத சடலம்!!

எழுதுமட்டுவாள் பகுதியிலும் தலையும் முகமாலைப் பகுதியில் முண்டமுமாக சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு எழுதுமட்டுவாள் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் தலையும் முகமாலைப் பகுதியில் அதன் முண்டமும் காணப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சடலத்தை மீட்ட பளை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். தலை காணப்பட்ட...

பொதுத் தேர்தல், தமிழரின் உடனடித் தேவை குறித்து லண்டனில் உயர்மட்டக் கூட்டம்! – சொல்ஹெய்ம், மங்கள, சுமந்திரன் பங்கேற்பு

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது. நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்றுவரைக்கும் இடம்பெறும். மேற்படி கூட்டத்தில் சர்வதேச தரப்புச் சார்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹீம்...
Ad Widget

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் வீதியோரமாக இளம் குடும்பஸ்தரின் சடலம்!

சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு அண்மையாக சடலம் ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இளம் குடும்பஷ்தரான தவக்குமார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இவர் வேலியோரமாக வீழ்ந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். இவரது மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை. இவரின் முகத்தில் உரசல் காயங்கள்...

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவரிடம் கப்பம் கோரியவர்களுக்கு விளக்கமறியல்

குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த...

இராணுவ பாவனையற்ற காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

உயர் பாதுகாப்பு வலயமாக சுவீகரிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளில் மக்களை மீளக்குடியர்த்தி, அவர்களின் மத வழிபாடுகளை தொடர்ந்து நடத்துவதற்கு இப்புதிய அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் ஆலய விசாக மடை திருவிழாவுக்கு, 25 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது...

கண் நோயிலிருந்து பாதுகாப்படையவும்

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கண்நோய் பரவி வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் http://www.e-jaffna.com/wp-admin/tools.phpஇருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்நோய் காரணமாக நாளொன்றுக்கு, அதிகளவான நோயாளிகள் வைத்தியசாலைகளை நோக்கி வருகின்றனர். வைரஸ் அல்லது பற்றீரியா தாக்கத்தினால் ஏற்படும் இந்த கண் நோயானது, 3 அல்லது 4 நாட்களுக்கு நீடிக்கும் என வைத்திய பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது....

எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சரணடையச் சொல்லவில்லை – கனிமொழி

தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை....

தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தையல் இயந்திரம் வழங்கும் நீண்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பருத்தித்துறை கந்தமுருகேசனார் சனசமூக நிலையம் மற்றும் ஓடக்கரை சனசமூக நிலையத்தில் 11 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ் றோட்டரி கழகத்தின் தற்போதைய பொருளாலர் நிமல்சன் மற்றும் புதிய தலைமுறை இயக்குநர் ஜெபநேசன் ஆகியோர்...

இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நியூஸிலாந்திடம் உதவிகோரியுள்ளனர்

இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகழிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும்,...

கவுணாவத்தையில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டி வைரவருக்கு வேள்வி!

கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன. இன்று சனிக்கிழமை காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள்...

வெங்காயம் ,உருளைகிழங்கு விலைகள் குறையும்

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்ட வரியானது குறைவடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியானது 55 சதவீதத்தில் இருந்து 20 வீதமாகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியானது 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மட்டுவில் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம்...

திரிஷாவுக்கு மேக்கப் போட்டுவிட்ட கமல்!

நடிகை திரிஷா, இன்று தனது டிவிட்டரில் ஒரு சூப்பர் படத்தைப் போட்டுள்ளார். எத்தனை பேருக்கு இந்த “பாக்கியம்” கிடைத்ததோ நமக்குத் தெரியாது.. ஆனால் திரிஷா தனக்குக் கிடைத்த பாக்கியத்தை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி அறிவித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம். அதாவது கமல்ஹாசன், திரிஷாவுக்கு மேக்கப் போடும் படம்தான அது. ஒரு தொழில்முறைக் கலைஞர் போல...

மகி நூடில்ஸ் விற்பனைக்குத் தடை

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மகி நூடில்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மகி நூடில்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது...

கஞ்சா விற்பனையில் குடும்பத்தை ஈடுபடுத்தியவருக்கு 7 மாத கடூழிய சிறை

கஞ்சா விற்பனையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை உட்படுத்தி அவர்களையும் மனதளவில் பாதிப்படையச் செய்த பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 7 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்தார். பருத்தித்துறை புனிதநகரிலுள்ள மதுபான நிலையத்துக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 31 வயதுடைய பெண்ணொருவரை வியாழக்கிழமை...

இலங்கையில் எப்போது நல்லிணக்கம் இருந்தது? – சிவாஜிலிங்கம்

சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்....

தமிழர் பிரதேசத்தில் விகாரை; காணி உரிமையாளர்கள் விடுவிப்பு

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரம் இருந்த விகாரை அமைக்கப்படும் காணி உரிமையாளர்கள் மூவரையும் விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். தனியார் காணிகளில் விகாரை அமைக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை கட்டுப்படுத்த வருகிறது சட்டம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார்...

சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகத்தில் இளைஞர் கைது!!

13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்டுகின்றது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தின அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆலயத் திருவிழாக்களின் போது சிறுமியின் தாயார் கச்சான் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு உதவியாகக் குறித்த இளைஞன் இருந்தார்...

எனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவாவில் தீ குளிப்பேன்!

"எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீ குளிப்பேன்" என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும், "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை...
Loading posts...

All posts loaded

No more posts