Ad Widget

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு

யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதன் போது உடன்...

யாழில் வீட்டு வாசலில் கிடந்த மோட்டார் குண்டு

அரியாலை பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முள்ளி வீதி - அரியாலை பகுதியில் உள்ள வீட்டு வாயிலின் முன்பாக குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம், இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டினை...
Ad Widget

பான் கீ மூன் – மைத்திரி இடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (04) மாலை தொலைபேசியில் அழைத்து பான் கீ மூன் வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச்...

வசாவிளான் ஞான வைரவர் ஆலயத்துக்கு செல்ல அனுமதி

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்திற்கு வெள்ளிகிழமை வழிபாட்டிற்கு செல்ல, பலாலி பாதுகாப்பு தலைமையகம் அனுமதித்துள்ளது. ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வெள்ளிக்கிழமை ஆகும். அதற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு அப் பகுதி மக்களினால் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர்,...

பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய்

தனக்கு பிறந்த குழந்தையை ஏற்க மறுத்த 30 வயதுடைய பெண்ணொருவரை, மானிப்பாயிலுள்ள காப்பகம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். திருமணமாகாத நிலையில் தான் அந்த குழந்தையை...

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின்...

காதலியின் கழுத்தை அறுத்த காதலனுக்கு விளக்கமறியல்

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் கைதான 20 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா, இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார். தன்னைக் காதலித்த பெண், தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் யுவதியின் கழுத்தை வெட்டியதுடன்,...

வாள்வெட்டு: நால்வர் படுகாயம்

கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள்...

வடக்கில் கொல்லப்பட்ட, காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து விசாரிக்கவும்

வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு யாழ். ஊடக அமையம், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல்...

யாழ். நகரில் குழப்பம் விளைவித்தமை; மாணவர்கள் உட்பட அறுவருக்கு பிணை

யாழ். நகரப் பகுதியில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற குழப்பச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு கல்வித்திணைக்கள பணியாளர் உட்பட அறுவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 34 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (04)...

 வடக்கு – கிழக்குக்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடும்

தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார்....

ரணில் குற்றச்சாட்டு மகிந்த மறுப்பு!

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருந்தெருக்கள் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தக் காலத்தில் வீதி அபிவிருத்திக்கென்று வங்கி ஒன்றில் இருந்து பெற்ற 55 பில்லியன் ரூபாயில் 28பில்லியன் ரூபாயை வேறு ஒரு அமைச்சுக்கு மாற்றியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம்...

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ , மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டனர்!

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேர் அந்நாட்டரசால் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களையே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இவர்களில் 54 இலங்கையர்கள், 10 பங்களாதேஷிகள், மியான்மாரை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகளா? – டக்ளஸ்

மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்குகின்றனரா? கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களின் பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளினால் எமது சமூகம் பட்டிருந்த வேதனைகள் ஏராளம். அந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில் மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்கியுள்ளமை எமது சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் செயலாகவே உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

டிப்பருடன் பஸ் மோதியதில் ஒருவர் பலி

முல்லைத்தீவு பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மோதியதில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில், சுமார் 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பஸ் குடைசாய்ந்தமையால்...

வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் சீ.சீ.ரி கமராவில் பதிவாகிய வீடியோவை பெறுங்கள் ; வித்தியா கொலைச் சந்தேக நபரின் கூற்றினையடுத்து மன்று உத்தரவு

வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 - 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 13 ஆம் திகதி காணாமல் போயிருந்த புங்குடுதீவு மாணவி வித்தியா 14ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில்...

வணிகர் கழகத்தின் இறுக்கமான நடைமுறைகள் இன்றுமுதல்

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள், பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டத்துக்கு முறையான நடைமுறைகளை, யாழ். வணிகர் கழகம், திங்கட்கிழமை (01) முதல் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ். வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த மே 26ஆம் திகதி நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, மாவட்டச் செயலாளர் நாகலிங்கம்...

போதைப்பொருள் விநியோகஸ்தர்களை மாணவர்கள் எமக்கு காட்டிக்கொடுக்க வேண்டும்

எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்: இருவருக்குப் பிணை! ஏனையோருக்கு விளக்கமறியல்!!

கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 130 பேரில் 47 பேர் இன்று யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் 16 வயதுக்குக் உட்பட்ட இருவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஏனையோருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்...
Loading posts...

All posts loaded

No more posts