Ad Widget

துருக்கியில் மேலும் ஒரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது

சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஒன்று ஏஜியன் கடற்கரை ஓரமாக கரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளை ஏற்றிக்கொண்டு, கிரேக்கத் தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர் காப்பாற்றப்பட்டுள்னர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக, துருக்கியில் கரை ஒதுங்கிய சிரிய குழந்தையின் நிழற் படங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளின் அவலநிலை குறித்து உலக அளவில் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.

Related Posts