Ad Widget

சிறுவர் மரணங்கள் – யாழ்ப்பாணத்திலும் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சிறுவர் மரணங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம்

ஊர்காவற்றுறை குளமொன்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறார்கள் நேற்றையதினம் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.10 மற்றும் 8 வயதான இரண்டு சிறார்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களான டெனிஸ்கரன் தனுசன் (வயது 11), சுரேஷ்குமார் விதுஷன் (வயது 8) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

பருத்தித்துறை மூர்க்கன் கடலில் சனிக்கிழமை (19) குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

புஸ்பராசா துவாரகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ராகம – மஹர – நுகேகொட பிரதேசத்தில் கட்டுமாணப் பணி இடம்பெற்று வரும் பிரதேசம் ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 5 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேநேரம் பொல்கஹவெல -வெல்கடஹேன பிரசேதத்தில் அருவில் ஒன்றில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts