Ad Widget

தனியார் பஸ்- வான் விபத்தில் 4 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் மூளாய்ப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற கயஸ் ரக வானுடன் மோதி குடைசாய்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மூளாய்க்கு சென்ற தனியார் பஸ்ஸும் கயஸ் ரக வானுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன....

பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாவிட்டால் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும்

பிள்ளைகள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென்றால் அது தொடர்பில் 1 மணித்தியாலத்துக்கு முன்னர் பெற்றோர்கள் பாடசாலைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தெரிவித்தார் தமிழ் சிவில் சமூகத்தின் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...
Ad Widget

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – அமைச்சர் ரஞ்சித்

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை மாதமும் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைத்துள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, தெரிவித்தார். கடந்த வருடத்தை விட இவ்வருடம் பஸ் சேவையை நடத்துவதற்கான செலவு 0.03 சதவீதத்தின் அடிப்படையில் குறைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

தமிழ் கலைஞர்கள் மனு: ஊடக அமைச்சுக்கு கட்டளை

சினிமா படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் வழியாக புறக் கலாசாரங்கள் பரவுவதை எதிர்த்து தமிழ் கலைஞர்கள் சங்கம் தாக்கல் செய்த உரிமைகள் மனு தொடர்பில் ஜூலை 11ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு வெகுஜன ஊடக அமைச்சுக்கு உயர்நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை கட்டளை அனுப்பியுள்ளது. இந்த வழக்கை, மேலும் நியாயப்படுத்துவதற்கான திகதியாக ஜூலை 11ஆம் திகதியை உயர்நீதிமன்றம்...

வடமாகாணத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: ஜனாதிபதி கவலை

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிக அளவில் மது அருந்தப்படுவதாகவும் இதனால், மதுபான விற்பனையின் மூலம் அங்கிருந்து அதிக அளவிலான வரிப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தென் மாகாணத்தில் பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். "எமது நாட்டில் நிலவுகின்ற மதுபான பிரச்சினையில் வடமாகாணத்தின் நிலைமையானது மிகவும் மோசமானதாக...

தடையுத்தரவையும் மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்கிறதாம்!

தடையுத்தரவை மீறி கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் , காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விகாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளில்...

நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. தனிவழிப் பயணம்!

ஜனாதிபதித் தேர்தலின்போது கூட்டணி அமைத்து அன்னம் சின்னத்துக்கு ஆதரவளித்த பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்...

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணையின் டி.என்.ஏ அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி தொடர்பில் இராசாயன பகுப்பாய்வு விசாரணை...

எனது அரசியல் வாழ்க்கையில் அரசிடமிருந்து ஒரு சதத்தைக்கூட பெறவில்லை: முதலமைச்சருக்கு மாவை பதில்!

தெற்கில் வைத்து எனக்கு 26 மில்லியன் தரப்பட்டதான செய்தி எனது 50 வருட அரசியல் வாழ்க்கையைக் களங்கத்துக்குள்ளாகியிருக்கிறது. நாங்கள் எந்த அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறுவேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. வடக்கு மாகாண...

மஹிந்தவின் நகைகள் கறுத்ததாக புகார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு முன்னாள் போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும்...

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முறைகேடுகளை எதிர்த்து போராட்டம்!

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முறைகேடுகளை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை நடத்தினர். யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் நியமன முறைகேடுகள் தொடர்பாகவும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க நியமனம் மற்றும் நிதிமுறைகேடுகள் தொடர்பாகவும் அதிருப்தி தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முறைகேடுகளை...

கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக பரபரப்பு

கே.எப்.சி.யில் பொரித்த கோழிக்கு பதில் பொரித்த எலி கொடுத்ததாக முகப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படமொன்றால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வோட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே. எப். சி . உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழி ஒன்றை கேட்டுள்ளார். எனினும் தனக்கு கோழிக்குப் பதில்...

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தேர்தல் தொகுதிகளுக்கு தலா 300 இலட்சம்!

கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு தலா 300 இலட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்தார். தடைப்பட்டுள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அலரி...

பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள் – வடக்கு முதல்வர்

கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள் முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மலையாளபுரத்திலுள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் கட்டடத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. அதில் அதிதியாக...

மக்களுடைய உதவியும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் போதைப்பொருளை கட்டுப்படுத்தலாம்

வடமாகாணத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு வியாழக்கிழமை (18) விஜயம் செய்த வடமாகாண முலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம், வடமாகாணத்தில் போதைப்பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்க தொழில் வங்கி உருவாக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கூட்டுறவு அமைப்புக்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு தொழில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சின் வழிகாட்டலின்படி கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தத் தொழில் வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவுத் தொழில் வங்கியில் பதிவு செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி...

நாம் விட்ட பணிகள் அடுத்துவரும் புதிய அரசில் தொடரும் – டக்ளஸ்

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு, பொரளை, கொட்டா வீதி, கலாநிதி என்.எம்.பெரேரா நிலையத்தில்...

எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடித்த மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு!

எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவன் ரகித்த தில்ஷான் மாலேவன சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த மாணவனை நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன...

நிதியுதவி பெற்றுக்கொண்ட த.தே.கூ எம்.பி.க்கள் யார்?

தெற்குக்கு அழைக்கப்பட்டு நிதியுதவி பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யாரென்பதை சபைக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா கோரியுள்ளார். இது தொடர்பில் தவராசா மேலும் கூறுகையில், 'வடமாகாண சபையை புறக்கணித்து விட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை...

சுதந்திரக் கட்சி வேட்பு மனுவிலும், தேசியப்பட்டியலிலும் மஹிந்தவின் பெயர் இல்லை! ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது. அத்துடன் தேர்தலின் பின்னரும் தேசியப்பட்டியல் மூலம் கூட எம்.பி. நியமனமும் இல்லை. - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Loading posts...

All posts loaded

No more posts