நவுரூ தீவில் அகதிகள் சுதந்திரமாக நடமாட அனுமதி

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய நிலையில் பசிபிக் தீவான நவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள், அந்த சிறிய தீவில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ்ரூ அரசாங்கம் நேற்று முன்தினம் குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இனி இந்த முகாம் திறந்த வெளி மையமாக செயல்படும் என நவுறு அரசாங்கம் சுட்டிகாட்டியுள்ளது. இதன் மூலம்...

வெடிகுண்டுக்கே பூ சுற்றிய பெண்

இங்கிலாந்தின் கவன்ட்ரி பகுதியில் கேத்ரின் ராவ்லின்ஸ் என்ற 45 வயது பெண்மணி, தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியாக இருந்த போது ஒருநாள், வீட்டருகே உள்ள வயல்வெளியில் குவளை போன்ற ஒரு பொருள் கிடைத்தது. அதை எடுத்து வந்த அவர், அதை பூ வைக்கும் ஜாடியாக பயன்படுத்தி வந்தார். கடந்த...
Ad Widget

வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது!!

சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது. அதைப் பெருமளவு மக்கள் பார்வையிடுவதோடு, பாலைப் போத்தல்களில் எடுத்தும் செல்கின்றனர். கடந்த வருடம் இந்தப் பகுதியில் உள்ள வேறொருவரின் வீட்டிலும் இவ்வாறு வேப்ப மரத்திலிருந்து 15 தினங்களுக்கு மேலாக பால்வடிந்ததது. மருத்துவ நிவாரணியான வேப்பம் பாலை மக்கள் ஆர்வத்துடன்...

சாவகச்சேரியில் புலி படம் பார்த்தோர் மீது மாடு மோதியது

சாவகச்சேரியிலுள்ள திரையரங்கில் புலி திரைப்படத்தை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர், வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியைச் சேர்ந்த சிவானந்தராஜா சுமன் (வயது 28), சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனுசன் (வயது 17) ஆகிய இருவருமே...

யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற...

கராத்தே போட்டியில் தாயும் மகனும் முதலிடம்

பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினால் (Institute of Martial Arts, Point Pedro), சிகான் பொனி றோபேட் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாயும் மகனும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர். இப்போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப்...

முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்ற செயல்! – டக்ளஸ்

யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா அவரகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...

கூட்டுறவாகச் செயற்பட்டதால் பப்பாசிப் பழ ஏற்றுமதியில் வவுனியா விவசாயிகள் சாதனை

பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி...

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கடந்த முதலாம் திகதி மூன்று பிரதான கட்சிகளுடன் எனது தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு...

வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500...

கல்லுண்டாய் கழிவு கொட்ட இடைக்கால தடை உத்தரவு

யாழ்.கல்லுண்டாய் வெளியில் 3 மாத காலத்துக்கு கழிவுகள் எவையும் கொட்டப்படக்கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்தரன் நேற்றைய தினம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்.கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கழிவுகள்கொட்டப் படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

அகதிகள் முகாமில் இருந்த இலங்கைப் பெண் மாயம்

தமிழகத்தின் மானா மதுரை இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் காணாமல் போனமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ரவி. இவரது மகள் நிரோஷா (21 வயது). இவர் மானாமதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வேலைக்குச்...

ஒடிசா போலீசாருக்கு கவாஸ்கர் கண்டனம்

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2–வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 92 ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்...

குழந்தைகள்தான் எனக்கு மகிழ்ச்சி – ஹன்சிகா

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஹன்சிகா. அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன? மகிழ்ச்சி அளிப்பது எது என்பது குறித்து சொல்கிறார்.. திரை உலகில் காலடி வைத்த பிறகு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன். ‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம்....

விபத்தில் இறந்த ரசிகர்களின் பெற்றோர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ‘புலி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.கே.டி.பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது. இப்படம் வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும்...

நடுவானில் விமானம் பறக்கும் போது பைலட் திடீர் மரணம்!!

147 பயணிகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறக்கும் போது பைலட் திடீரென மரணமடைந்தார். அமெரிக்காவின் பீனிக்ஸ் - பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தடம் எண் 550 என்ற அடையாளத்துடன் அந்த விமானம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியான பீனிக்ஸ் நகரில் இருந்து வடகிழக்கு...

வாள்களுடன் ஐவர் கைது

ஏழாலை மயிலணிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் புரிய முற்பட்ட 5 பேர் கொண்ட கும்பலை, ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் வாள்கள், கத்திகளுடன் மயிலணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கும்பலொன்று நுழைய முற்பட்டுள்ளது. எனினும், வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டு அயலவர்கள் கூடியமையால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து...

கோப்பாய் சந்தியில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமானார். நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வடமராட்சி -பருத்தித்துறை - கற்கோவளத்தைச் சேர்ந்த எஸ்.மணிமாறன் (வயது -32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமானவராவார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர் கடமை முடிந்து...

சேயாவை தானே கொன்றாராம்! கொண்டயாவின் சகோதரர் வாக்குமூலம்!! இருவருக்கும் 19 வரை மறியல் நீடிப்பு!!!

வன்கொடுமையின் பின் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்ட சிறுமி சேயாவை தானே கொலை செய்தார் என்று சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கொண்டயாவின் சகோதரரான ஜயலத். சேயா கொலை வழக்கு நேற்று மினுவாங்கொட நீதிமன்றில் பிரதம நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஜயலத் மேற்கண்டவாறு வாக்குமூலம் அளித்தார் என்று சி.ஐ.டியினர் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினர். சேயா கொலைக்குப் பின்னர் கொண்டயா...

மீன்தொட்டிக்கு 37 கோடி ரூபா! ஒரு மீனுக்கு ரூ.65 ஆயிரம்!! மஹிந்தவின் வீண் செலவுகளை பட்டியலிடுகிறார் சம்பிக்க!!!

மஹிந்த அரசால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட...
Loading posts...

All posts loaded

No more posts