Ad Widget

கோப்பாய் சந்தியில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதகுடன் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமானார்.

நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வடமராட்சி -பருத்தித்துறை – கற்கோவளத்தைச் சேர்ந்த எஸ்.மணிமாறன் (வயது -32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமானவராவார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர் கடமை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்து நடந்ததும் அங்கு நின்றவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் வழியிலேயே இறந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts