Ad Widget

யாழில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா !

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

nemal-sri-di-pala-silva-1

இன்று காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்தார்.

யாழ். புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கெடுக்கும் அமைச்சர் தொடர்ந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தார்.

அமைச்சர் விஜயத்தின் போது யாழ். புகையிரத நிலைய சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டு இருந்தது. அதனைத் திறந்து பார்வையிட்ட அமைச்சர், பராமரிப்பின்றி இருந்த சிற்றுண்டிச்சாலை தொடர்பில் விசனம் வெளியிட்டதோடு, அதிகாரிகளையும் அழைத்து தனது கண்டனத்தினையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் யாழ். கோண்டாவில் பிரதான பஸ் டிப்போவிற்கு விஜயம் செய்யும் அமைச்சர் நிமால் யாழ்ப்பாணத்து அரச பேருந்து சேவையின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், காரைநகர் பஸ்டிப்போ மற்றும் கிளிநொச்சி பஸ்டிப்போ ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts