மாணவனின் சாவிற்காக கைதிகளை விடுவிக்க முடியாது

மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவையில்லை என பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி...

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிக்கிறது – வடக்கு முதல்வர்

முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு...
Ad Widget

மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்

“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...

விலைக்குறைப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையூடாக கண்காணிப்பு

இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ம​கேஸ்வரன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரவிக்கையைில், மக்களுக்கு...

இந்தியாவுடனான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அனுமதி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அல்லது வேறு ஏதாவது பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில்...

138 ஆண்டுகளின் பின் நடெபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. 138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் பகலிரவாக நடைபெறவுள்ள முதல் போட்டி இதுவாகும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகளின் போது சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். ஆனால் இந்தப்...

தியாகிகளை நினைவுகூருவதை இராணுவம், பொலிஸார் தடுக்கக்கூடாது! நாடாளுமன்றில் கூட்டமைப்பு வலியுறுத்து!!

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்ட இந்த உரிமையை இராணுவமும், பொலிஸாரும் தடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின்...

இன்று மாவீரர் நாள்! – உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க உலகெங்கும் பெரும் ஏற்பாடு!

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உட்பட உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் உரிமைக்காகக் களமாடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக, மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி...

நோர்வே தூதுவர் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கோஸ்ரட்சீதர் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (26.11.2015) இடம்பெற்றுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்றுக்கொண்ட தோர்ப்ஜோர்ன் வடக்கில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் நோக்குடன் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அதன்...

தற்கொலை செய்த மாணவனுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி பாடசாலை மாணவன் ஒருவன் புகைவண்டி...

ஆனையிறவு வெளியில் பறக்கிறது புலிக்கொடி

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற...

இறந்தவர்களுக்கு அஞ்சுலி செலுத்த உரிமை உண்டு

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். இறந்தவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அவர்களை விற்பனைப் பொருளாக கையாள்வதையும் கைவிடவேண்டும் எனவும் அவர் கூறினார். அத்துடன், இறந்தவர்களுக்காக அவரது உறவுகள் அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது....

நயினாதீவு என்ற பெயர் தொடர்ந்து இருக்க வேண்டும் – சி.வி.கே

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியில் அமைந்துள்ள நயினாதீவின் பெயர் தொடர்ந்தும் நயினாதீவு என்று இருப்பதையே நாங்கள் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியிருந்தோமே தவிர பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அல்ல என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் கடந்த அமர்வின் போது, நயினாதீவு என்பதன் பெயரானது, நாகதீபம் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அது, நயினாதீவு...

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைகளுக்காக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர், மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்காது!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல் நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெறுமதி சேர் வரி இதுவரை 11% ஆக இருந்ததோடு,...

யாழ்.நகரில் பொதிகள் பரிமாற்ற சேவை நிறுவனத்தில் தீப்பற்றியது!

யாழ்.நகரில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் பரிமாற்று சேவை நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவின் துரித செயற்பாட்டினால் தீ பரவுவது தடுக்கப்பட்டு சேதங்களும் தடுக்கப்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கார்த்திகை தீப திருநாளான நேற்று ஏற்றி வைக்கப்பட்டிருந்த சுட்டி விளக்கே விபத்திற்கு காரணம்...

தமிழீழத்தைக் கொடு! அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனத் தெரிவித்து மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...

மாவீரர்களைப் பொது இடங்களில் நினைவுகூர முடியாது! மீறினால் சட்ட நடவடிக்கையாம்!!

"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகும். எனவே, பொது இடங்களில் மரணித்த புலிகளை நினைவுகூருவது, புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானதாகும். இது தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'' - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். "வடக்கு, கிழக்குப்...

மரணித்த உறவுகளை அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது!

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள், நாளை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி...

விபத்துக்களில் காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

இருவேறு சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி மரணமாகினர். உதயகுமார் சுரேஷ் (வயது 23), பாலசிங்கம் மயூரதன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். முள்ளியவளையைச் சேர்ந்த உதயகுமார் சுரேஷ் கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளுக்குப் பெற்றோல் நிரப்புவதற்காக வீட்டிலிருந்த பெற்றோல் கானைத் எடுத்து வந்துள்ளார். சமையலறையால் வந்தபோது...
Loading posts...

All posts loaded

No more posts