Ad Widget

விபத்துக்களில் காயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

இருவேறு சம்பவங்களில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி மரணமாகினர்.

உதயகுமார் சுரேஷ் (வயது 23), பாலசிங்கம் மயூரதன் (வயது 23) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

முள்ளியவளையைச் சேர்ந்த உதயகுமார் சுரேஷ் கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளுக்குப் பெற்றோல் நிரப்புவதற்காக வீட்டிலிருந்த பெற்றோல் கானைத் எடுத்து வந்துள்ளார். சமையலறையால் வந்தபோது கான் தவறி வீழ்ந்ததில் எரிந்து கொண்டிருந்த அடுப்பிற்கு அண்மையாக வீழ்ந்துள்ளது. இதனால் தீப்பற்றியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று கடந்த 18 ஆம் திகதி கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த மயூரதன் யாழ். நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிரே வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் இருக்க சடுதியாக பிறேக் பிடித்துள்ளார். இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமானார். இருவரின் மரண விசாரணைகளையும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related Posts