கோதுமை மாவை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம்...

8ம் திகதி வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரன்

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயகத் தேசியக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன்...
Ad Widget

இலங்கையில் H.I.V நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர். 15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய்...

பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை தண்ணி அடிக்க அழைத்த கெயில்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில். அதுமட்டுமா உங்கள் கண்கள் ரொம்ப அழகு என்று எசக்கு பிசக்காக பேட்டி அளித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று...

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி

வடமராட்சி, பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் நிதியுதவியில் இவ்வருடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது குறித்து சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைமுக...

தொடரை வென்றது நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு...

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை – டி.ராஜேந்தர்

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை...

போதைவஸ்தின் மூலம் சமூகப் பிரச்சினை தோற்றுவிக்கப்படுகின்றது

கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின்...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி!

பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன...

ஏனைய மக்களைப் போன்று வடக்கு மக்களுக்கும் உரிமை! காணிகள் மீளளிக்கப்படும் – பிரதமர்

வடக்கு மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றவும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை ஏற்படுத்துவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த பொருளாதார சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்வைத்து, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அபிவிருத்தியை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த...

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி!

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் சட்ட வல்லுநருமான சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம்...

நிலையான ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வே வேண்டும்! முன்னாள் பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்!!

நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன். இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை...

உயர்தர பரீட்சையின் மீள்திருத்த விண்ணப்பம் பெப். 05 வரை

2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, முடிவுகளில் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யலாம்?

நாட்டின் சில பாகங்களில் குறிப்பாக வட, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (05) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மத்திய சப்ரகமுவ மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம்...

புது வருடம் பிறந்து நான்கு நாட்கிளிலேயே யாழில் 30 டெங்கு நோயாளர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் 2016 ஆம் ஆண்டு பிறந்த நான்கு நாட்களில் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்கு உள்ளாகியிருந்து அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339...

தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு குறித்து தௌிவுபடுத்த வேண்டும்!

அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும்...

மாதவன் தமிழ் சினிமாவின் சொத்து – சூர்யா

மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம் ‘இறுதிச்சுற்று’. இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, பாலா, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர்....

கேப்பாபிலவு மக்கள் தம்மை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

வடமாகாண பொது சேவைகள் ஆணைக்குழு பதவி உயர்வுகளை உரிய முறையில் வழங்குமா?

வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில், உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய 22 பேரின் பதவி உயர்வுகளை வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு உரிய முறையில் வழங்குமா என பாதிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த 2010 ம் ஆண்டு வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை மத்திய அரசினால்...
Loading posts...

All posts loaded

No more posts