இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு

தமிழகத்தின் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி ரோகினி (31). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரோகினி தனது...

போர் குற்றங்கள் பற்றிய சிறப்பு நீதிமன்றம் குறித்து அவசரப்படப் போவதில்லை!

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
Ad Widget

இங்கிலாந்தின் 22 வயது கிரிக்கெட் வீரர் மர்ம சாவு

இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....

இது பார்த்திபனின் ‘பீப்’ பாடல்…

வெள்ளம் பாதித்த சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை எழுதி, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிம்பு மீதும், அனிருத் மீதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை...

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 2500 மாணவர்கள் இணைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைகழகங்களுக்கு இம்முறை 2000 தொடக்கம் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 2,000 வரையான மாணவர்கள் தொழிநுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழிநுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

15ஆம் திகதி காணிகள் விடுவிப்புக் குறித்த பலாலியில் ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்!

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர். தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம்...

6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் – ஜனாதிபதி உறுதி

நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு - கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே...

பேஸ்புக் காதலால் நகைகளை இழந்த பெண்

முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்,தான்...

காணிகளில் மனித பூதவுடல்கள்

கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழிப்படைந்த பொதுமக்கள் இன்று(04) வடமாகாண சபை உறுப்பினர்...

பஸ்களுக்கு இரும்பு வலை

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

உயர்பாதுகாப்பு வலயத்தில் 5,710 ஏக்கர் இருக்கின்றன

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். 'வலிகாமம் வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் 210 ஏக்கர்களும் இவ்வாறு விடுவிக்கப்படவேண்டும். விடுவிக்கப்படாத காணிகளில்...

சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை

இரகசிய முகாம்கள், சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை. அவ்வாறான முகாம்கள் நடத்தவேண்டிய தேவை இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட...

கூட்டமைப்பின் பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றினால் இணைவேன்

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பின் அரசியல் பரப்பில் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம்' என, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில், இது தொடர்பில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்துள்ள அவர், அதில்...

தூர்வாருமாறு இராணுவத்தைச் சொல்லவில்லை

யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வடிகான்களை மூடிய இராணுவத்தினர், யுத்தத்தின் பின்னர் இந்த வடிகான்களை மீண்டும் மறுசீரமைக்குமாறு தருமாறு கூறினேனே தவிர, இராணுவத்தினரை யாழ்பாணத்தில் குப்பை கான்களை தூர்வாருமாறு கூறவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையைக் கட்டியெழுப்புவது தொடர்பான யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். யுத்தத்தின்...

இந்திய – மியன்மர் எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இன்று காலை இந்திய - மியன்மர் எல்லை அருகே, வடக்கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்...

ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும...

நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முதியவர் மீண்டும் வெளிநாடு செல்ல மனமற்ற நிலையில் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொக்குவில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபாபதி பாலசுப்பிரமணியம் (வயது 80) என்பவர் கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் இருந்து மனைவியுடன் தனது வீட்டுக்கு...

ரஜினி சொன்னதால் தான் அமிதாப் நடிக்கவில்லை!

ரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம். அமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம். அதனால்...

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன் !

தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் நடப்பது அரிதிலும் அரிது தான். அப்பா, மகள் என இந்திய சினிமாவையே கலக்கி கொண்டு இருப்பவர்கள் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்களாம். படத்திலும் அப்பா, மகளாகவே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படம் குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts