பேரவையில் இணைவது குறித்து விரைவில் விக்னேஸ்வரனுடன் பேசவுள்ளாராம் கருணா!

தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தி அதில் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்...

செல்வம் எம்.பிக்கு திடீர் மாரடைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், திடீர் மாரடைப்பு காரணமாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...
Ad Widget

உயர்தரப் பரீட்சை முடிவு! யாழ். இந்துக் கல்லூரியில் 29 பேருக்கு 3ஏ!

இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 29 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதன் மூலம் இம்முறை யாழ்மாவட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னணி வகிக்கின்றது. இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின்...

முல்லைத்தீவில் கடற்படை முகாமுக்கு நிலங்களை சுவீகரிக்க எதிர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை எடுத்துள்ளார். இதன்படி 32 வாக்குகள் வித்தியாசத்தில் திலங்க சுமதிபால வெற்றியீட்டியுள்ளார். திலங்க சுமதிபால இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்...

கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் – ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யாராய் குழந்தை ஆரத்யா பிறந்த பிறகு சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். ‘ஜஸ்பா’ படம் மூலம் மீண்டும் ‘பாலிவுட்’ பட உலகுக்கு திரும்பினார். ஆனால் இந்த படம் எதிர் பார்த்தபடி ஓடவில்லை. தற்போது, கரண் ஜோகிதர் இயக்கத்தில், ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். ரன்பிர் கபூர் ஹீரோவாக...

அனைவரும் இணைந்து பணியாற்றினால் மாற்றம் வரும்- சூர்யா

சென்னை சாந்தோம் செயின்ட் பீட்டஸ் பள்ளியில் அகரம் பவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு 2 நாள் கருத்தரங்கம் யாதும் ஊரே என்ற பெயரில் நடைபெறுகிறது. நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நடிகர் சூர்யா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:– உலகில் 130 லட்சத்துக்கும் அதிகமான உயிர் இனங்கள் வாழ்கின்றன. அதில் ஒரு உயிரினம்...

கல்வி நிர்வாக சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன. 219 வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவும் 515 வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலமாகவும், 118 வெற்றிடங்கள் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களில் சேவை மூப்பு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளது. கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு அந்த...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு...

வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் அரசுடமையாகிறது!

வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு அதிக காலம் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் இந்த சட்டத்தின்படி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்...

இலங்கை – நியூஸிலாந்து 4வது போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூஸிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நலுவவிட்டது. இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும்...

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம்!

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு...

யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை ஏற்க முடியாது என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகளுக்குப் பதிலாக நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும், அகதி வாழ்க்கை வாழும் மக்களுக்கு நிரந்தர இல்லமும் வழங்குவதே அவசியம் என்றும்...

குசல், ரங்­கன ஹேரத்துடன் ஆட்ட நிர்­ணய முக­வர்­களை கைது செய்­யவும்

தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்து உட்­கொண்ட குற்­றச்­சாட்டின் பேரில் ஆரம்ப துடுப்­பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் முன்­னணி சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் ஆகி­யோரை ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­ப­டுத்த முயன்றவர்­களை கைது செய்து சதி­திட்ட பின்­னணி குறித்து வெளிப்­ப­டுத்­து­மாறு நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு முறை­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விளையாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் இந்த முறைப்­பாடு...

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை

015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்­தி­னையும் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பி­வைப்­ப­தோடு தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களின் பெறு­பே­றுகள் அனைத்­தி­னையும் அவர்­களின்...

வட,கிழக்கில் முகாம்களிலுள்ள மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 11 ஆயிரம் வீடுகள்!

வடக்கு, கிழக்கில் 11 000 வீடுகள் அமைக்கப்பட்டு 32 முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு 6 மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். விரைவில் செய்து முடிக்க வேண்டிய பல கட மைகள் எமக்கு உள்ளன. அவற்றில் பிரதானமாக வடகிழக்கு மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு சிறந்த...

அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே???

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். கட்டடப் பணிகள் இன்னமும்...

விபத்தில் ஒருவர் மரணம்

சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் சங்குப்பிட்டியிலிருந்து தனங்கிளப்பை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்து...

பலாலி விமான நிலையம் வடக்குக்கான சர்வதேச விமான நிலையமாக மாறும்! மாவை எம்.பி. தகவல்!!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார வலயங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது கிட்டியுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக...

ஓய்வு பெறுகிறார் ஜோசப் ஆண்டகை? அவரின் இடத்துக்கு நால்வரின் பெயர்கள் பரிந்துரை!

தமிழ்த் தேசியத்துக்காக அயராது தொடர்ந்து உழைக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் நலக் குறைவால் ஓய்வு பெறவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் இடத்துக்கு நால்வரைத் தெரிவு செய்து அவர்களின் பெயர்களை திருத்தந்தை பிரான்சிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.ஜோசப்...
Loading posts...

All posts loaded

No more posts