Ad Widget

ஓய்வு பெறுகிறார் ஜோசப் ஆண்டகை? அவரின் இடத்துக்கு நால்வரின் பெயர்கள் பரிந்துரை!

தமிழ்த் தேசியத்துக்காக அயராது தொடர்ந்து உழைக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் நலக் குறைவால் ஓய்வு பெறவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் இடத்துக்கு நால்வரைத் தெரிவு செய்து அவர்களின் பெயர்களை திருத்தந்தை பிரான்சிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.ஜோசப் ஆண்டகையின் உடல் நலனில் தற்போது முன்னேற்றம் காணப்படுகின்றது. எனினும் அவர் வழமைக்குத் திரும்பவில்லை. எனினும் அவர் ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார் எனத் தெரிகின்றது.

இந்நிலையில் தற்போது ஜோசப் ஆண்டகையின் பணிகளை செய்துவரும் அம்மாவட்டத்தின் குரு முதல்வர் வண. விக்டர் சோசை, மடு தேவாலய பரிபாலகர் வண.எமில், வங்காலப் பங்குத் தந்தை வண. ஜெயபாலன், மன்னார் பேராலயத்தின் பங்குத்தந்தை வண.தேவராஜா ஆகியோரின் பெயர்களை இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது.

Related Posts