Ad Widget

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா!

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனும் சுயதனிமைப்படுத்தலில்...

வெள்ளிக்கிழமை நாடு முடக்கப்படாவிட்டால், அது திங்களன்று கட்டாய முடக்கத்துக்கு வழிவகுக்கும்!!

14 நாள்களுக்கு நாடு முழுவதையும் தனிமைப்படுத்துமாறு அரசிடம் வலியுறுத்தி இன்று நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு முன்னால் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமாக முடக்கப்பட்டால், நாட்டின் சுகாதாரத் துறைக்கான 100 சதவீத பொறுப்பை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். எவ்வாறாயினும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாடு முடக்கப்படாவிட்டால்,...
Ad Widget

நாட்டை முடக்க முடியாது!! ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்....

நாட்டை முடக்குவதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசு நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு – சுகாதார அமைச்சர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மாதாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு மேலதிகமாக, நாட்டில் தினசரி வருமானம்...

வர்த்தக நிலையங்களில் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் -யாழ் வணிகர்கழக தலைவர்

யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கோவிட் -19 நிலமைகளை எவ்வாறு கையாளுவது தெடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தகர்களுக்கான அறிவித்தலாக தற்போது நாட்டில் கோவிட் -19 மிக...

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறமிருக்க யாழில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கிறது – கஜேந்திரன்

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ( 17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில், மக்கள் செத்து...

நல்லூர் திருவிழா- பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து, யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாண பொலிஸாருடன் நேரடியாக களத்திற்குச் சென்று கலந்துரையாடலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டார். அதாவது விசேட திருவிழாக்கள் மற்றும் பூஜை நேரங்களை தவிர மீதி நேரங்களில்...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப...

கொரோனாவால் நாட்டில் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 3 ஆயிரத்து 609 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக...

இலங்கையில் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. SA 222 – V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவை டெல்டா வகையின் கூர்மையான பிறழ்வுகள் என்றும் இலங்கையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா!!

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “எனக்கும் என் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமையால், நாங்கள் பிசிஆர் சோதனை செய்தோம். அதில் தொற்றுள்ளமை...

கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில் 13 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பொதுச் சந்தையை தற்காலிகமாக...

மக்களின் பொது நடமாட்டத்தை 80 – 90 சதவீதமாகக் குறைக்கவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி...

நாட்டை முடக்காமல் இருக்கும் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் – சுமந்திரன்

இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையைக் கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். என்று தமிழ்த் தேசியக்...

வல்வெட்டித்துறையில் 2 பிள்ளைகளின் தந்தை கொலை!!

வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி...

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த...

வடமராட்சி கற்கோவளத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது!

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி...

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!!

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய...

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது - கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது....

சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன் – கெஹெலிய

இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பதவி மாற்றம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாகச்...
Loading posts...

All posts loaded

No more posts