Ad Widget

மக்களின் பொது நடமாட்டத்தை 80 – 90 சதவீதமாகக் குறைக்கவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் முறைக்கு வெளியே, தடுப்பூசி செயல்முறை மேற்கொள்ளப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றொரு குறிப்பில் குற்றம்சாட்டியது.

Related Posts