Ad Widget

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பதில் பணிப்பாளரை தொலைபேசியில் மிரட்டிய தென்னிலங்கை வாசி!!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய அந்த நபர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பு கடந்த 16ஆம் திகதி...

ஊரடங்கு வேளையில் மூவரை துரத்திச் சென்று சரமாரியான வாள்வெட்டு

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் தமக்கு தெரியாது...
Ad Widget

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது . யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப்...

இன்றிரவு முதல் ஓகஸ்ட் 30 அதிகாலை வரை நாடுமுடக்கம்!!

நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்குவது குறித்த மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பு!!

ஒருவார காலத்துக்கேனும் நாட்டை முடக்கி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய செவி சாய்த்துள்ளார். கொவிட்-19 தடுப்பூ பணிக்குழுவின் கூட்டதிற்கு பின்னர், அது குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டை முடக்குவது தொடர்பான...

புதிய அரசியலமைப்பு- கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை!

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னர்...

நாடு முடக்கப்பட்டால் எம்பிக்கள், அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு?

நாடுமுழுவதும் ஊரடங்கு விதிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதமும், சுகாதாரத் துறை தவிர்ந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் மற்றும் சிற்றூழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும் நன்கொடையாக வழங்கவேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதிய...

அரை றாத்தல் பாணும் பருப்பும் 150 ரூபாய்; பிளேன் ரீ 25 ரூபாய்!! உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிப்பு!!

திங்கட்கிழமை முதல் வெதுப்பக உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து வெதுப்பக உற்பத்திகளின் விலையை உயர்த்துவது நியாயமானது. பாண் மற்றும் பிற வெதுப்பக...

வர்த்தக நிலையங்களை மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது- இராணுவத் தளபதி

வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலைமை உணர்ந்து வர்த்தகர்கள், தங்களது வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் பலி!!

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும் கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண்...

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுமக்களும் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!! மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர்,...

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!!

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தது 3 வாரங்களாவது நாட்டை முடக்கவேண்டும்!! அரச பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசின் பங்காளிக் கட்சிகள் 10 இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டைப் முடக்காமல் கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை மருத்துவமனைகளினால் தாங்கமுடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று அவர்கள் நம்புவதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் 10 கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நமது...

யாழில் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில், இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்...

அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது. இதவேளை, வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஐத்...

பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின!!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக நேற்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின் படி ஷொப்பிங் மால்கள் இன்று...

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாம்- விசேட வைத்திய நிபுணர்

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி மக்களை வலியுறுத்தியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றவர்களுக்கே தற்போது...

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்க அரசு தயார்

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்த நேரத்திலும் நாட்டை முடக்கும் முடிவை எடுக்க தயங்கமாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். நாட்டை மூடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இல்லை என்று அவர் கூறினார். கோவிட்-19...

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்!

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமானளவு ஒட்சிசனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு நாட்டினை முழுமையாக முடக்கு,...
Loading posts...

All posts loaded

No more posts