Ad Widget

வடக்கில் நேற்றுவரை 327 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் மட்டும் 224 பேர்

வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் -26) வரை 23 ஆயிரத்து 36 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த...

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை!!

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் மூளைச்சாவடைந்து இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன் என்ற இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளிகளுக்கு தலா ஒன்று என மாற்றப்பட்டன. சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் உயிர் வாழ்ந்த இருவருக்கும் சிறுநீரகங்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை...
Ad Widget

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட...

யாழ்ப்பாணத்தில் 39 வயதுடைய பெண் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

நாட்டை மேலும் 2 வாரங்கள் முடக்குமாறு ரணில் வலியுறுத்து!!

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அறிவுறுத்தல்களின்படி நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தினசரி பதிவாகும் நோய்த்தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நாட்டை முடக்குவதன் மூலம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற...

கோவிட்-19 நோயினால் உயிரிழப்பைத் தடுக்க தடுப்பூசி அவசியம்!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களை விட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 8.1 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பேராசிரியர்...

பயணக் கட்டுப்பாடுகளால் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது – சுகாதார அமைச்சர் கெஹெலிய

பயணக் கட்டுப்பாடுகளால் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், உலகின் பிற பகுதிகளில் ஆராய்ச்சி அதை நிரூபித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கோவிட்-19 நோய்த்தொற்றுத் தொடர்பில் எந்த போலித் தரவையும் சுகாதார அமைச்சு வழங்காது என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப மற்றும் கால...

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனா

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வசிக்கும் வயோதிப பெண்மணியொருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு...

யாழில் தனியார் வங்கியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். நாடு முழுவதும் பல பகுதிகளில் குறித்த 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்ட இடங்களில் அவற்றினை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் அது குறித்து பிரதேச...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண்...

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் நேற்று (24.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனா...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!

சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொதிகளையே இவ்வாறு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு,...

ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்!!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள்...

கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உண்ண வேண்டிய உணவுகள்!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து...

குருநகர் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்தவருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் மாநகர் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த...

ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணையவழியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ் கட்சிகள் இணைந்து ஜெனிவாவிற்கு கடிதமொன்றை அனுப்புவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேநேரம், முதற்கட்டமாக ஒருமித்த...

யாழ்ப்பாணத்தில் இருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு...

ஓர் நேர்மையான தேசிய வாதியை இந்த நாடு இழந்துள்ளது – மங்களவின் மறைவு குறித்து ஸ்ரீகாந்தா

ஓர் நேர்மையான தேசிய வாதியை மங்கள சமரவீரவின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார். அவரின் மறைவு குறித்து ந.ஸ்ரீகாந்தா...

2,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று ஆரம்பம்!!

தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்தார். இதுவரை, இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கிராம உத்தியோகத்தர்,...
Loading posts...

All posts loaded

No more posts