Ad Widget

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்க அரசு தயார்

சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்த நேரத்திலும் நாட்டை முடக்கும் முடிவை எடுக்க தயங்கமாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

நாட்டை மூடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இல்லை என்று அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்கும் முடிவை அரசு எடுக்காவிட்டால், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து துறைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தொழிற்சங்கங்கள் அரசை எச்சரித்துள்ளன.

இதேவேளை, நாட்டை முழுமையாக முடக்க முடியாது என்றும் பயணக்கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts