Ad Widget

கொரோனாவால் நாட்டில் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 3 ஆயிரத்து 609 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

102 ஆண்களும் 69 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 வயதுக்கு குறைவான ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 65 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 14 ஆயிரத்து 340 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 45 ஆயிரத்து 80 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Posts