Ad Widget

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா!!

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “எனக்கும் என் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமையால், நாங்கள் பிசிஆர் சோதனை செய்தோம். அதில் தொற்றுள்ளமை இன்று காலை உறுதி செய்யப்பட்டது.

எனவே அண்மையில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை சோதித்து தனிமைப்படுத்திக்கொள்ளவும்” என பதிவிட்டுள்ளார்.

Related Posts