Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த (45 வயது) ஆண் ஒருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts