பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக பலமடைந்து மேற்கு நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபாலிடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு...
Ad Widget

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட போகிறது என வதந்திகளை நம்பவேண்டாம்!

தற்போது மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் குறைந்து வருவதனால் வான் கதவுகள் திறக்கப்படமாட்டாது என எந்திரி சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தினை தொடர்ந்து கண்காணிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் குளத்தில் நீர் 32.11 அடி இருப்பதனால் 36 அடி வரைக்கும் சேமிக்க முடியும் என்ற காரணத்தால்...

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை – சிவாஜிலிங்கம்

நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ்தேசிய...

‘நாட்டில் அரசாங்கம் இல்லை, பிரதமர் இல்லை“ – இரா. சம்பந்தன்

அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள உலக நாடுகளின் தூதுவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. நாட்டில்...

அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும்: மங்கள

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட...

சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்!

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம்...

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை: சந்தேகநபர்கள் மூவருக்கும் பிணை

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர்...

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்

உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நியாயமான ஒரு தீர்வு கிடைக்காத நிலையை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்திவந்ததனாலேயே, போராடவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள். அத்துடன் அந்தப் பிள்ளைகளை விதைத்த இடத்தில் அவர்களுடைய உறவுகள்...

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி மகிழ்ச்சி!

நாடாளுமன்றில் இன்று அமைதியை பேணியமைக்காக அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான்காவது நாளாக இன்று (திங்கட்கிழமை) 1 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார். “கட்சித்தலைவர்களுடனான நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில்...

வித்தியா கொலை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்!

மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக...

நிதியுதவியை நிறுத்தியது உலக வங்கி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. இதற்காக 2018...

எம்மை வெளியேற்றுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த அருகதையும் கிடையாது – க.சிவநேசன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற புளொட்டின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே புளொட் அமைப்பு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் கட்சியை நீடிப்பதற்கு அனுமதியளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளம் சட்டத்தரணிகள் பேரவையின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்திருந்தனர். எனினும்...

வடக்கில் டெங்கு அபாயம்: வைரஸ் காய்ச்சலும் பரவுகிறது – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டின் பல மாவட்டங்களில் இன்புலுவன்ச வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இடைவிடா காய்ச்சல், இருமல், வாந்தியெடுத்தல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரின் சோதனையைப் பெறுமாறு ஆலோசனை வழங்கியுள்ள சுகாதார அமைச்சு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகக்...

வடமாகாணத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மாகாணத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் தென்கிழக்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால் இன்றிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடக்கில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் நாட்டின்...

கூட்டமைப்புக்கு எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் அனைவரும் இணைவோம் – பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் அழைப்பு

“தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை...

மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா...

எம்மை நாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை இனிமேலும் நடக்கக்கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்

எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எவ்வாறு எமது...

போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் இல்லை: கஜேந்திரகுமார்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாறிய அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட...

நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தான் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டுமானால் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்தோ அல்லது இலத்திரனியல் முறையைப்...
Loading posts...

All posts loaded

No more posts