யாழ் மாவட்டத்தில் 1,253 பட்டதாரி பயிலுனர்கள் நியமனம்

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கும் தேசியத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 253 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இலங்கைப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனுமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12வது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள ஊடக சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை...
Ad Widget

வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த

நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்தானந்த மேலும்...

சட்டத்தரணிகள் குருபரன், சுபாசினிக்கு சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தல்!!

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர்...

ஸ்மாட் லாம்ப் போல் அமைக்கத் தடை கோரி மனு – மாநகர சபைக்கு சார்பாக சுமந்திரன் முன்னிலையாகிறார்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாவார் என்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன்,...

மதுபோதையில் ஏற்பட்ட முறுகல் இரட்டைக் கொலையில் முடிந்தது!!

கிளிநொச்சியில் தாயையும் மகனையும் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாயையும் அவரது மகனையும் சந்தேகநபர் வெட்டிக் கொலை செய்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தாயும்...

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு...

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி!

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி நாளை மறுதினம் காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இந்து அமைப்புக்கள் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள...

அரச பணியிலிருந்து கொண்டு இன்று நியமனம் பெற இருந்த 104 பட்டதாரிகள் சிக்கினர்!!

ஏற்கனவே அரச பணியிலிருந்துகொண்டு வேலையற்ற பட்டதாரிகளிற்கான நியமனத்தில் உள்வாங்கப்பட்ட 104 பேர் நேற்றுவரையில் இனம்கானப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தகவலை மறைத்து நியமனம் பெற முயற்சித்நமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலையில்லாப் பட்டதாரிகளிற்கான நியமனம் தற்போது வழங்கப்படும் நிலையில் இன்னமும் ஆயிரக் கணக்கான பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் ஏற்கனவே...

வடக்குக்கான புகைரத சேவை 6 ஆக அதிகாிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம்- கொழும்பு ரயில் சேவை ஆறாக அதிகரிக்கிறது. புதிதாக இரு சேவைகள்.யாழ்ப்பாணத்துக்கும்- கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும் ரயில் சேவை நான்கிலிருந்து ஆறாக நாளை வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்பிரகாரம் இரவு தபால் ரயில் சேவையில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தரப்பினர் தெரிவித்தனர்.அதாவது தற்போது தினமும் காலை 6.10 மணிக்கு உத்தரதேவி நகர்சேர் கடுகதியும்...

கீாிமலை புனித பூமியை குப்பை மேடாக்க சதி..! வெளிநாட்டு கழிவுகளும் கொட்டப்படும் அபாயம்!!

வலிகாமம் வடக்கு கீாிமலை பகுதியில் சுன்னாம்பு கல் அகழப்பட்ட குழியில் குப்பைகளை கொட்டும் நடவடி க்கைக்கு கடுமையான எதிா்ப்பு காட்டப்பட்டுள்ளதுடன், கீாிமனையின் புனித தன்மையை சீரழிக்கும் செயற்பாடும் எதிா்கால அபிவிருத்தியை சிதைக்கும் செயற்பாடுமாகும். மேற்கண்டவாறு யாழ்.பல்கலைக்கழக திட்டமிடல் பிாிவு சிரேஸ்ட விாிவுரையாளா் செல்வராசா ரவீந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். யாழ்.மாவட்டத்தின் பரிய அளவில் எழுந்துள்ள குப்பை பிரச்சினைக்காகன தீர்வு...

கிளிநொச்சியில் தாயும் மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (30) செவ்வாய்க்கிழமை காலையில் அவர்களது இருவரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். 70 வயதான தாயும், 34 வயதுடைய மகனின் சடலமுமே வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டப்பட்டு, குருதி வெள்ளத்தில் சடலங்களாக காணப்பட்டனர். அவர்கள் கொலை...

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது ! – சுமந்திரன்

கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும் ? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். "பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு...

இந்தியத் துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்ரெம்பர் முதல் பலாலி ஓடுதளம் செயற்படும்!!

பலாலி விமான நிலையம் இந்திய துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்தார். பலாலி ஓடு தளத்தில் 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும்...

மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் – தமிழ் மக்கள் பேரவை அறைகூவல்

செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்....

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) ஆரம்பிக்க ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள்...

யாழ்ப்பாணம் வருகை தந்த நாமல் சா்வமத தலைவா்களுடன் சந்திப்பு!!

நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வழிபாடுகளையும், சா்வமத தலைவா்கள் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளாா். இன்று திங்கட்கிழமை காலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்குச் சென்ற நாமல் ராஜபக்ச,...

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த நபர் கொடிகாமம் பகுதியில் மது போதையில் தொடருந்து தண்டவாளத்தில் படுத்திருந்த காரணத்தினாலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிப் பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு!!

வடக்கு மாகாணத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சாரதிப் பயிற்சி பெறுபவர்களுக்கு செயன்முறை பயிற்சியை இரவில் கட்டாயம் வழங்கவேண்டும் என்று மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார். வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப்...

என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில்!!

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சினால் இரண்டாவது என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது . இதன்போதே யாழில் இடம்பெறுவதற்கான அறிவித்தலும் விடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதேநேரம் குறித்த நடமாடும் சேவை இடம்பெறும்...
Loading posts...

All posts loaded

No more posts