Ad Widget

இந்தியத் துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்ரெம்பர் முதல் பலாலி ஓடுதளம் செயற்படும்!!

பலாலி விமான நிலையம் இந்திய துணைக் கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்தார்.

பலாலி ஓடு தளத்தில் 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழகம் சென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும். விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளன.

3 ஆயிரத்து 800 மீற்றர் நீளமான ஓடு பாதையில் A320 ரக விமானங்கள் தரையிறங்க கூடியதாக அமைக்கப்படவுள்ளது. இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை, தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவுள்ளது” என்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்தார்.

Related Posts