- Sunday
- May 3rd, 2026
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எதிர்வரும் 14ஆம் திகதி இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் நாட்டில் கோரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. கோரோனா தொற்று நோயினால்...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது பிற்போடப்பட்டுள்ளதால் தொலைக்கல்வியூடாக மாணவர்களுக்கு வீடுகளில் இருந்து கற்பிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகள் நேற்று(09) ஆரம்பிக்கப்பட இருந்தன. ஆனால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு இருவாரங்களுக்கு பின்போடப்பட்டுள்ளது.கல்விச் செயற்பாடுகளில் இருந்து மாணவர்கள் தூரமாவதை தடுக்கும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பொதுஜனபெரமுன அலுவலகத்தில்...
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, பல்வேறு அரச திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பிலியந்தலை - வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல்(11.11.2020) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட சேவையாளர்களுடன் குறித்த திணைக்களம் நாளைய தினம் திற்கப்படவுள்ளதாகவும், நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்தும்...
யாழ்ப்பாணம் – தீவகம், மண்டைதீவில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டது. மண்டைதீவு J/7 கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு மேலதிகமாக காணியை வழங்குவதற்காக பொது மக்களுக்கு சொந்தமான காணியை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் இன்று அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது....
எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும்!! மக்களின் ஒத்துழைப்பே தேவை!! – ஜனாதிபதி
எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை...
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இதற்குரிய விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா...
பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணத்தில்...
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வைரஸ் பரலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அதன் தலைவர் உபுல் றோஹன இவ்வாறு...
கோவிட் – 19 நோய் காரணமாக அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இரண்டு பேர் உயிரை மாய்த்துள்ளனர் என்று பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகலவத்தை மற்றும் ஜா-எலவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியாகப் பணிபுரிந்த 56 வயது நபர் நேற்று அகலவத்தையில்...
உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என...
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளில் இன்று மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று...
கொழும்புக்கான பயணத்தை அவசர தேவை கருதி மேற்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். “தற்போதைய சூழலில் கொழும்புக்கான பயணத்தைத் தவிர்க்கவேண்டும். அவசர விடயத்தைத் தவிர ஒருவர் கொழும்புக்கு வரக்கூடாது” என்று அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கூடுதலான கோரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த...
மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக அவருடன் சம்பவ இடத்தில் நின்ற இளைஞன் அரச சாட்சியாக மாறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “எனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தான் வளர்ப்பதற்குத் தருமாறு...
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் 'கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' மற்றுமொரு கட்டம் 2020.11.08 (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்...
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்...
வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை மோசடி செய்து கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையினாிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார்...
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...
மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “ஆடு மேய்ப்பவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பெண் கிராம அலுவலகர் ஒருவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்தது எனச் சந்தேகிக்கப்படும் குருதிக் கறை படிந்த சேட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
