Ad Widget

தீபாவளியை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்- வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எதிர்வரும் 14ஆம் திகதி இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டில் கோரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது.

கோரோனா தொற்று நோயினால் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன.

இந்தநிலையில் தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்த தொற்று நோய் எமது பிரதேசத்திலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே இந்தத் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது இத்தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவோம் – என்றுள்ளது.

Related Posts