கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயதுடைய ஆண் ஒருவரும் மீகொடயில் வசிக்கும் 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது- கஜேந்திரன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நாடாளுமன்ற...
Ad Widget

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி இன்று மாலை சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். இன்றைய நிலவரப்படி நாடுமுழுவதும் 29 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி

இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே...

கடமைகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மஹிந்த மஹிந்த தேசபிரிய!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் அண்மையில்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்ற குற்றசாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது அலைபேசியும் பறித்து சென்றது. நாடுமுழுவதும் கோரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில்...

தொற்றா நோயுள்ளோருக்கு கோவிட் -19 பாதித்தால் சிறப்புக் கவனம் தேவை; மேல் மாகாணத்தில் உள்ளோரை ஏனைய மாகாணங்களுக்கு அனுமதிக்கவேண்டாம்-ஜனாதிபதி

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருதய நோய், நீரிழிவு,...

தாக்குதலுக்கு தயாராகவிருந்ததாக இளைஞர் ஒருவர் வாளுடன் கைது

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வீட்டில் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் ஜிபிஎஸ் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைகளுடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருக்கும் சந்தேக...

கிளிநொச்சியில் மூன்றாவது கொரோனா தொற்றாளர் கண்டறிவு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்குநேற்றைய தினம் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், கொழும்பில் பணிபுரிவதுடன் வெள்ளவத்தையிலிருந்து கோணாவிலுக்கு வந்த நிலையில்...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவருக்கு தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முகாமில் IDH வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது!

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை (Infectious Disease Hospital for Northern Province) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன்...

யாழ்.மாவட்டத்திற்குள் வருபவர்கள் சுகாதாரப் பிரிவினரிடம் பதிவு செய்யவும்!

கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன்தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்...

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும் – தயாசிறி ஜயசேகர

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள், புலிகளின் இலக்கத் தகடுகள் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் மனித எச்சங்கள், கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் விடுதலைப் புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடுகள், உடைகள் போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் வயல் நிலத்தை உழுது பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் வரம்பு கட்டும்போது மனித...

யாழ். பல்கலை மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து...

பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

அரச, தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்று அபாய நிலைமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 1.2 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 12 ரூபாயில் இருந்து...

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 41 ஆக பதிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...

7ம் திகதிக்கு பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கிற்கு வந்தோர் கவனத்திற்கு!!

நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த...

வடமாகாணத்தில் அனைத்து அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் விவரங்களை MOH அலுவலகத்தில் ஒப்படைக்கப் பணிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிவிப்பை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்...
Loading posts...

All posts loaded

No more posts