தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை கண்காணிக்க விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி இன்று மாலை சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி நாடுமுழுவதும் 29 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.