- Sunday
- June 22nd, 2025

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து...

திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தற்போது பெரும் நெருக்கடியாகியுள்ளநிலையில் எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் வசிப்பவர்களிடமிருந்து குப்பைக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். (more…)

கடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளராக திரு.செ.சந்திரராஜா நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் வழங்கினார். ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின்...

பிரதான வீதிகளில் பாதுகாப்புக் குறியீடுகள் மற்றும் பாதசாரிக் கடவைகள் என்பன அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (more…)

வடபகுதி இளம் சமூகத்தின் மத்தியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சில விஷக் கிருமிகள் ஊடுருவியுள்ளன. எனவே, எமது சமூகம் விழிப்பாக இருந்து மண்ணின் மகிமையை பாதுகாக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டடத்திற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய கட்டடமானது துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டு வருகின்றது. (more…)

இந்திய வீட்டுத்திட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்குரிய கிராம சேவையாளர்கள் பிரிவுகள் இனங்காணப்பட்டு பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன என்று யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்திய அரசின் நிதியுதவியில் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரம் வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

அச்சுவேலியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டாவது சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்றினால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். (more…)

யாழ். குருநகர் கடற்கரைப்பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 10 ஆமைகளை யாழ். பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

மொழிப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் எந்தப் பாகத்திலும் மொழி தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் 1956 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டினைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பண்ணை ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமராய்ச்சி இன்று தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோரின் நலன் கருதி, 'புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு வேலைத்திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

இந்திய அரசாங்கத்தினால் குருநகர் சீனோர் வலை தொழிற்சாலைக்கு 140 மில்லியன் ரூபா நிதியில் வலை உற்பத்தி இயந்திரங்கள் கையளிக்கப்பட்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே. மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

ஏ9 வீதி யின் செம்மணிப்பகுதியில் அபிவிருத்திப் பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீண்டும் அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. (more…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப் பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். (more…)

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார். (more…)

All posts loaded
No more posts